MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் சரியான திசையில் – ரோகித் சர்மா நம்பிக்கை

Admin
Last updated: மே 24, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணியின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் மனநிலை என இரு தளங்களிலும் இந்த முன்னேற்றம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக கிரிக்கெட்டில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என்றும், அதற்கான சரியான இடத்தில் இந்தியா இருப்பதாக அவர் நம்புவதாகவும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் நடத்திய ESA தின நிகழ்வில் பேசிய ரோகித், 'இந்தியா உலக கிரிக்கெட்டின் மாபெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இந்தியாவின் கடந்த மூன்று ஆண்டு கால பங்களிப்புகள் அசாத்தியமானவை. 2024 உலகக் கோப்பை, மகளிர் உலகக் கோப்பை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் மற்றொரு டி20 உலகக் கோப்பை என பல்வேறு தொடர்களில் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. எங்களின் வெற்றிக்கான பயணத்தைத் தொடர்வோம் என நம்புகிறேன்' என்று உற்சாகத்துடன் கூறினார். இந்தியாவின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும், வயதுப் பிரிவுகளிலும் கிடைத்த வெற்றிகள், நாட்டின் துடிப்பான கிரிக்கெட் கட்டமைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

தனது அறிமுகக் காலத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களையும் ரோகித் சர்மா விளக்கினார். 'நாங்கள் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில், 130-140 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது சவாலானது. இப்போது எந்த ஒரு ரன் இலக்கும் போதுமானதாக இல்லை. இது காலப்போக்கில் இந்த விளையாட்டு எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது' என்று தெரிவித்தார். மேலும், 'வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், திறந்த மனதுடனும் செயல்படுகிறார்கள். இது விளையாட்டு மற்றும் லீக் போட்டிகளுக்கு ஒரு நல்ல அறிகுறி. அவர்கள் பழைய பழைமைவாத நுட்பங்களுக்குள் முடங்காமல், ஒரு படி மேலே சென்று சவால்களை எதிர்கொள்ளத் தயங்குவதில்லை. எதிர்வரும் ஆண்டுகளிலும் இதேபோன்ற அணுகுமுறை தொடரும், இது விளையாட்டை இன்னும் பெரிய தளத்திற்குக் கொண்டு செல்லும்' என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆறு வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர் என்பதை நான் அறிவேன். அவர்களின் வாழ்க்கையின் இவ்வளவு ஆரம்ப காலகட்டத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் விளையாட்டை ரசிக்க வேண்டும், நண்பர்களுடன் பார்க்கவும் விளையாடவும் வேண்டும். இதுதான் எனக்கும் தொடங்கியது. சூழ்நிலையின் தேவையை உணர்ந்து விளையாட்டை அனுபவிப்பதே முக்கியம். எதையும் செய்யும்படி ஒருவர் உங்களை வற்புறுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 'நான் அறிமுகமானதில் இருந்து இன்றுவரை, கற்றுக்கொள்ள நிறைய சூழ்நிலைகள் இருந்தன. இதிலிருந்து நான் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான பல வழிமுறைகளை உணர்ந்தேன். விளையாட்டில் எப்போதுமெ ஒரு சீரான பயணம் கிடையாது. சிகரங்கள் மட்டுமல்ல, சரிவுகளும் நிறைய கற்க உதவுகின்றன' என்று அவர் விளக்கினார். இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, அணியின் இலக்கே மிக முக்கியம் என்பதை உறுதிப்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருவர் கேப்டனாக இருக்கும்போது அது வேறு கதை. ஏனெனில் நீங்கள் உங்கள் செயல்திறனைப் பற்றி மட்டும் கவலைப்பட தேவையில்லை. மற்ற வீரர்களின் செயல்திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் சதம் அடித்திருந்தாலும், மற்றவர்கள் சரியாக விளையாட முடியாமல் அணி ஆட்டத்தை இழந்தால் அது கவலையளிக்கும். முடிவுகள் சாதகமாக வரும் வரை உங்களுக்கு நிம்மதி கிடைக்காது' என்று ரோகித் சர்மா விளக்கினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketIndian CricketRohit Sharmaஇந்திய கிரிக்கெட்கிரிக்கெட்ரோகித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
Next Article சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5.25 லட்சம், 25 பவுன் திருட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: கெயில் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் 97 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி, கிறிஸ் கெயிலின் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையை முறியடித்தார். குறைந்த பந்துகளில்…

2 Min Read
விளையாட்டு

தீப்தி ஷர்மாவின் 5 விக்கெட் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

மகளிர் டி20 உலகக் கோப்பையில் தீப்தி ஷர்மாவின் 5 விக்கெட் சிறப்பால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. தீப்தி ஷர்மா தன்னம்பிக்கை குறித்து இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.

1 Min Read
விளையாட்டு

மக்காவ் ஓபன்: இந்திய வீராங்கனை ஆரம்ப சுற்றிலேயே வெளியேற்றம்

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய முன்னணி வீராங்கனை ஆரம்ப சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது, இந்தியப் பதக்க நம்பிக்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
விளையாட்டு

ஆர்சிபிக்கு 4 இடம்.. சிஎஸ்கேக்கு ஒன்னு – அஷ்வின் தேர்வு செய்த இந்திய புதிய டி20 அணி

ஐபிஎல் 2026 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய டி20 அணி குறித்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய பார்மின் அடிப்படையில் இந்திய புதிய டி20 அணிக்கான…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?