MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் மீதான நம்பிக்கை குறைகிறதா? ஆர்பி உதயகுமார் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் மீதான நம்பிக்கை குறைகிறதா? ஆர்பி உதயகுமார் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் மீதான நம்பிக்கை குறைகிறதா? ஆர்பி உதயகுமார் கேள்வி

தமிழ்நாடு

விஜய் மீதான நம்பிக்கை குறைகிறதா? ஆர்பி உதயகுமார் கேள்வி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 20, 2026 10:40 காலை
Fernandez
Share
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்
SHARE

ஜென் ஸி தலைமுறைக்கு நடிகர் விஜய் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டதா அல்லது விஜய்க்கு ஜென் ஸி தலைமுறையின் மீது நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் பேசிய அவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி கல்வி இயக்கம் பிறப்பித்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்தார்.

கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சார்பில் கடந்த 17ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது வெளியானதாகவும், வெளியான 2 மணி நேரத்திலேயே அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியதாகவும் ஆர்பி உதயகுமார் குறிப்பிட்டார்.

தவெக அரசின் இந்த ஜனநாயக உரிமை பறிப்பு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அதிரடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கல்லூரி கல்வி இயக்கம் நேற்று அறிவித்து உத்தரவை வெளியிட்டது. கல்விக்கான உரிமை உள்ளிட்ட இந்த உரிமைகள் எப்பொழுதெல்லாம் அதிகார மையத்தால் பறிக்கப்படுகின்றதோ, மறுக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் இளைய சமுதாயமும், மாணவ சமுதாயமும் பொங்கி எழுந்து போராட்டக் களம் அமைத்து, உரிமை முழக்கத்தால் அதிகார மையத்தை அடிபணிய வைக்கும் என்று அவர் கூறினார்.

ஜென் ஸி தலைமுறையின் போராட்ட வரலாறு, இளைய தலைமுறை போராட்ட வரலாற்றை முதல்வர் விஜய் நன்கு அறிந்திருந்த போதிலும், இன்னும் ஒரு படி மேலே சென்று கண்மூடித்தனமாக ஜென் ஸி தலைமுறை, அவதாரம் புருஷராக, காக்க வந்த கடவுளாக, முதல்வர் விஜய் அவர்களை கொண்டாடி வரும் நிலையில், அவர்களின் அடிமடியில் கை வைக்கின்ற துணிச்சல் எப்படி வந்தது என்பது தெரியவில்லை என்றும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கு எடுக்காத காரணத்தினால், மக்களுடைய உரிமைக்கான போராட்ட பட்டினி போராட்டத்தில் அவர் பங்கேற்ற வரலாறு மறைக்க முடியாதது என்றும், இதனால் தான் போராட்ட களத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது, இளைஞர்கள் பங்கேற்கக் கூடாது என்று இப்படி அதிரடியான ஜனநாயக விரோத உத்தரவை பிறப்பிக்க துணிச்சல் வருகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இன்றைக்கு 35 சதவீதம் வாக்காளர்கள் விஜய் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம், ஆனால் 65 சதவீதம் மக்கள் விஜய் வேண்டாம், விசில் வேண்டாம், தவெக வேண்டாம் என்று தான் வாக்களித்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு உத்தரவை அறிவித்து திரும்பப் பெறுவது என்ன நடைமுறை என்றும், உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னால் அதன் சாதக, பாதகங்கள், விளைவுகள் குறித்து இந்த அரசு ஆராய்ந்ததா என்றும், அல்லது ஆராய்ந்து சொல்வதற்கு இவர் கேட்பதற்கு தயாராக இருக்கிறாரா, அல்லது சொல்வதற்கு யாரும் தயாராக இல்லையா, அல்லது இவர் கேட்பதற்கு தயாராக இல்லையா என்பது புரியவில்லை என்றும் ஆர்பி உதயகுமார் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsVIJAYஅதிமுகஆர்பி உதயகுமார்தவெக அரசுமாணவர் போராட்டம்விஜய்ஜென் ஸி தலைமுறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடக்கும் அரசு பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பேர் காயம்
Next Article காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சீன ஆக்கிரமிப்பு: அரசுக்கு கார்கே கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர்களுக்கு சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு. தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்...

0 Min Read
ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு
தமிழ்நாடு

சேலம் வழியாக சிறப்பு ரயில்: ஓணம் பண்டிகை சிறப்பு அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு - கண்ணூர் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும்.

1 Min Read
நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்
தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் மூலம் நெல் நடவு பணி தீவிரம்

125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் காரணமாக உள்ளூர் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த முடிவு மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?