வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்கக் கூடாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீடு அல்லது வீட்டுக் காப்பீடு போன்றவற்றை எடுப்பதை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் அளிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி, அவர்களுக்குத் தேவையில்லாத நிதிப் பொருட்களை விற்க வங்கிகள் முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு எந்தவிதமான காப்பீட்டையும் கட்டாயமாக்கக் கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு எடுக்க வேண்டும் என்றும், அதை கடன் வழங்குவதற்கான நிபந்தனையாகக் கருதக்கூடாது என்றும் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வீட்டுக் கடன் வாங்குவோருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இனி வங்கிகளின் கெடுபிடிகளுக்கு இடம் கொடுக்காமல், தங்களுக்குத் தேவையான காப்பீட்டை மட்டுமே வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.