ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கிடப்பதாக பரவிய தகவலால், ஊரே திரண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் பரப்பி உள்ளனர். இதனால், ஊரே ஒன்று சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்டவை தங்கக் காசுகள் அல்ல, மாறாக செம்பு காசுகள் என தெரியவந்துள்ளது. இந்த காசுகளில் 63% செம்பு மற்றும் 36% ஸிங்க் கலந்துள்ளது. காசுகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You Might Also Like
பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும் ரூ.500 அபராதம்: ரயில்வேயின் விதியால் சர்ச்சை
மும்பையில் பிளாட்பாரம் டிக்கெட் இருந்தும், ரயில் தாமதமானதால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வேயின் 2 மணி நேர விதிமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
1 Min Read
தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டை சரிசெய்ய வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Min Read
ஆளுநர் மாளிகை அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – முக்கிய காரணம் இதுதான்!
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஒதுக்கப்பட்டிருந்த 10 பாதுகாப்பு வாகனங்கள் 4 ஆகக் குறைப்பு.
1 Min Read
சென்னை: சூட்கேசில் உடல் பாகங்கள், மனைவி உட்பட 2 பேர் கைது
சென்னை தேனாம்பேட்டையில் அமீர் அலி கொலை வழக்கில், அவரது மனைவி உட்பட 2 பேர் கைது. சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் குறித்து விசாரணை.
1 Min Read