ராசிபுரம் அருகே சாலையோரம் தங்கக் காசுகள் கிடப்பதாக பரவிய தகவலால், ஊரே திரண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டியில் இன்று காலை சிலர் காசுகளை கண்டெடுத்துள்ளனர். அவர்கள், தங்கக் காசுகள் சாலையோரத்தில் கிடப்பதாக ஊர் முழுவதும் பரப்பி உள்ளனர். இதனால், ஊரே ஒன்று சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்டவை தங்கக் காசுகள் அல்ல, மாறாக செம்பு காசுகள் என தெரியவந்துள்ளது. இந்த காசுகளில் 63% செம்பு மற்றும் 36% ஸிங்க் கலந்துள்ளது. காசுகளை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You Might Also Like
பச்சைத் தண்ணீரால் புத்துணர்ச்சியா? வெந்நீரால் இதமா? மருத்துவர் விளக்கம்
உடனடி புத்துணர்ச்சிக்கு பச்சைத் தண்ணீர் குளியல், உடல் வலி மற்றும் சோர்வுக்கு வெந்நீர் குளியல் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப தேர்வு செய்யவும்.
1 Min Read
இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: நியூ சண்டிகரில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு. மானவ் சுதார் அறிமுகம்.
1 Min Read
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்ளுபடி
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது தொடரப்பட்ட பாலியல் தொல்லை வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் வில் ஸ்மித், ‘பேஸ்டு ஆன் த ட்ரூ…
1 Min Read
போதைப்பொருள் கடத்தலை வேரறுப்போம்: மனோஜ் சின்ஹா உறுதி
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளை வேட்டையாடுவோம் என்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
1 Min Read

