MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

க்ரைம்

மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்: ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

Fernandez
Last updated: ஜூலை 22, 2026 4:39 மணி
Fernandez
Share
மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்
மனைவியைக் கொன்று பெட்டியில் அடைத்த கணவன்
SHARE

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், மதுபானம் வாங்க பணம் தர மறுத்த மனைவியை கொடூரமாக அடித்து கொன்று, அவரது உடலை இரும்பு பெட்டியில் மறைத்து வைத்த கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரஜ்கர் அருகே வசிக்கும் கிருஷ்ண குமார் ஜாட் (40) என்பவருக்கும் அவரது மனைவி சுலோச்சனா (34) என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் கிருஷ்ண குமார் தகராறு செய்துள்ளார். ஆனால், சுலோச்சனா பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ண குமார், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுலோச்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குற்றத்தை மறைப்பதற்காக, கணவன் கிருஷ்ண குமார், தனது மனைவியின் உடலை கைகளால் கட்டி, வீட்டின் உள்ளே இருந்த ஒரு இரும்பு பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். நான்கு நாட்களுக்குப் பிறகு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அப்போது, போதையில் இருந்த கிருஷ்ண குமார், தனக்கு தெரிந்த ஒருவரிடம் இந்த கொடூர சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதன் மூலமாகவே காவல்துறையினருக்கு இந்த பயங்கர சம்பவம் தெரியவந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பூட்டப்பட்ட இரும்பு பெட்டியை உடைத்து, அதனுள் இருந்த சுலோச்சனாவின் சடலத்தை மீட்டனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், கணவன் கிருஷ்ண குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் நடந்த நேரத்தில், கிருஷ்ண குமார் மற்றும் சுலோச்சனா தம்பதியரின் 16 வயது மகன் வீட்டில் இல்லை என்றும், அவன் திரும்பி வந்தபோது தாய் எங்கோ சென்றிருப்பதாக தந்தை கூறியதை நம்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விசாரணையில் கிருஷ்ண குமார் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeMurderRajasthanகணவன் கொலைகுற்ற சம்பவம்மனைவி கொலைராஜஸ்தான்ஜுன்ஜுனு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகி சவுரவ் தாஸ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி ஜந்தர் மந்தரில் மட்டுமே பேச்சுவார்த்தை: சிஜேபி திட்டவட்டம்
Next Article விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு: டெல்லி மெட்ரோ அறிவிப்பு

டெல்லியில் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக டெல்லி…

ஜூலை 22, 2026

உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் நிபந்தனை விதித்தார்

லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருக்கும்…

ஜூலை 22, 2026

நீட் தேர்வு ஒரு குற்றமா? மாணவர் போராட்டங்களுக்கு ராகுல் ஆதரவு

நீட் தேர்வு மாணவர்களின் உயிரைப் பறிப்பதாகவும், முறைகேடுகளில்…

ஜூலை 22, 2026

சிஜேபி போராட்டத்தில் வன்முறை: மத்திய அரசு, காவல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லியில் ஜூலை 20 அன்று நடந்த சிஜேபி…

ஜூலை 22, 2026

10 ஆண்டுகளில் 152 தேர்வு வினாத்தாள் கசிவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை தேர்வு…

ஜூலை 22, 2026

You Might Also Like

கொலை செய்யப்பட்ட கணவன் பற்றிய செய்தி
இந்தியா

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த இளம்பெண்ணின் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிருடன் இருந்தால் கள்ளக்காதலுடன் வாழ…

1 Min Read
க்ரைம்

காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

நெல்லை களக்காடு அருகே இளம்பெண்ணை காதலித்ததால் உறவினர்களால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை முழுமையாக கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த வாலிபரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம்…

1 Min Read
க்ரைம்

சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது

சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் குபேந்திரன், முத்துமணி தலைமையிலான கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?