ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' திரைப்படம் 2011ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2015ஆம் ஆண்டில் 'காஞ்சனா 2' மற்றும் 2019ஆம் ஆண்டில் 'காஞ்சனா 3' ஆகிய அடுத்தடுத்த பாகங்களையும் ராகவா லாரன்ஸ் இயக்கினார். திகில்-நகைச்சுவை வகையைச் சேர்ந்த இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஈர்ப்பை பெற்றன.
இதனைத் தொடர்ந்து, 'காஞ்சனா-4' திரைப்படம் தற்போது தீவிரமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் ராகவா லாரன்ஸே எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன், பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா படேஹி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 'காஞ்சனா' திரைப்படத் தொடரின் கடைசி பாகம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்த ஓரிரு மாதங்களில் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


