புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்
- Published by:
Last Updated:Apr 27, 2026 3:19 PM IST
புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக செயலாளர் அன்பழகன், இந்த விவகாரத்தில் அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார் அக்கட்சியின் புதுச்சேரி செயலாளர் அன்பழகன்.இந்தியா முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை, இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ-யின் கீழ் வரும் பள்ளிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய மொழிக் கொள்கை தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பியுள்ளது.அதில், பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மாணவர்களிடையே மொழித் திறன், கலாசார புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு உள்ளூர் இந்திய மொழிகளைக் கற்பிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.advertisementஇதன்படி, 2026-27 கல்வி ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதாகவும், 3 மொழிகளில் இரு மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் 7 நாட்களுக்குள் 3வது இந்திய மொழி கற்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவு, புதுச்சேரி மாணவர்களிடையே குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன. புதுச்சேரி மாணவர்கள் தற்போது பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்கும் நிலையில், பிரெஞ்சு மற்றும் இந்தியை கூடுதலாக கற்று வருகின்றனர்.advertisementபுதிய மொழி கொள்கையின்படி ஒரு வெளிநாட்டு மொழிதான் கற்க வேண்டும் என்பதால், ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு மொழியை கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் வெளிப்படுத்தியுள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த விவகாரத்தில் அரசு சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கை விவகாரத்தில் சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மத்திய அரசு சொல்லிவிட்டது என்பதால் உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. மாணவர்கள் பாதிப்படையாத வண்ணம் செயல்பட வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான். முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கொள்கை முடிவின்படி புதுச்சேரியில் மும்மொழி கொள்கை என்பது அவசியமற்றது. இரு மொழிக் கொள்கை மட்டுமே தேவையானது” இவ்வாறு தெரிவித்தார்.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :Puducherry (Pondicherry)First Published :Apr 27, 2026 3:19 PM IST//புதுச்சேரியில் மும்மொழி கொள்கை! – அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – செயலாளர் அன்பழகன் விளக்கம்