West Bengal : மேற்கு வங்கத்தில் மதுவா கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
- Published by:
Last Updated:Apr 27, 2026 3:37 PM IST
பிரதமரின் இந்த வருகை பாஜகவிற்கு மதுவா சமூகத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தாகூர்நகரில் அமைந்திருக்கும் ‘மதுவா மகாசங்க’த்தின் முக்கியக் கோயிலான தாகூர்பாரியில் வழிபாடு நடத்தினார்.19-ஆம் நூற்றாண்டில் ஹரிசந்த் தாகூர் மற்றும் குருசந்த் தாகூர் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த மதுவா இயக்கம், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலம் நமசூத்ரா சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒரு ஆன்மீக அமைப்பாகும்.கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு இது குறித்து பதிவிட்ட பிரதமர், “ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாகூர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ குருசந்த் தாகூரின் கொள்கைகள் இன்றும் சமூகத்திற்கு ஒளியூட்டுகின்றன” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முன்னதாக 2019-இல் தாகூர்நகருக்கும், 2021-இல் வங்கதேசத்தில் உள்ள ஓராகண்டிக்கும் பிரதமர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.advertisementஅரசியல் ரீதியாகப் பார்த்தால், மதுவா சமூகம் மேற்கு வங்கத் தேர்தலில் மிக முக்கியமான சக்தியாக விளங்குகிறது. இந்த மாநிலத்தின் சுமார் 34 சட்டசபைத் தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், எல்லைப் பகுதிகளில் உள்ள மேலும் பல தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகமாகவும் இவர்கள் உள்ளனர்.2021 தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்கு இச்சமூகம் பெரும் ஆதரவை வழங்கியது. இந்தச் சூழலில், மதுவா சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையான குடியுரிமை தொடர்பான விவகாரத்தில், தகுதியுள்ளவர்களுக்கு சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.advertisementஇருப்பினும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், பிரதமரின் இந்த வருகை பாஜகவிற்கு மதுவா சமூகத்தின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29, 2026 அன்று நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தல் பெரும்பாலும் தெற்கு வங்காளம் மற்றும் கொல்கத்தாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.advertisementவடக்கு 24 பர்கானாசின் தாகூர்நகர், பன்காவ்ன், ஹாப்ரா, அசோக்நகர், கிருஷ்ணாநகர், ரானாகாட், சாந்திபூர், சிங்குர், பாண்டுவா, சந்தன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :Tamil NaduFirst Published :Apr 27, 2026 3:37 PM IST//West Bengal : மேற்கு வங்கத்தில் மதுவா கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்.. அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுவது ஏன்?