MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு
உலகம்

நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு

Admin
Last updated: May 18, 2026 5:58 pm
Admin
Share
SHARE

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்தில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, சுவீடன் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அரசியல் மற்றும் வணிக தலைவர்கள், இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்கை நுண்ணறிவு, பசுமை போக்குவரத்து, நவீன உற்பத்தி போன்ற துறைகளிலும் ஆலோசனைகள் நடைபெற்றன.

சுவீடனில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' வழங்கப்பட்டது. இது உலகளவில் மோடிக்குக் கிடைக்கும் 31-வது உயரிய கவுரவமாகும். சுவீடன் பயணத்தை முடித்ததும், பிரதமர் மோடி நார்வேக்குச் சென்றார். அங்கு அவரை அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் விமான நிலையத்திலேயே நேரில் சென்று வரவேற்றார்.

சமீபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் முதன்முறையாக நார்வே செல்லும் இந்தியப் பிரதமர் மோடி இதுதான் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது இந்திய-நார்வே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நார்வே மன்னர் 5-ம் ஹரால்டு மற்றும் அரசி சொஞ்சா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். மேலும், பிரதமர் ஸ்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார். நாளை ஆஸ்லோவில் நடைபெறும் இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:NorwayPM Modiஇந்திய-நார்டிக் உச்சி மாநாடுஐரோப்பா பயணம்பிரதமர் மோடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article UAPA வழக்குகளிலும் ஜாமீன் உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Next Article நாளை முக்கிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

உலகம்

ஈரான் அதிபர்: பேச்சுவார்த்தை மறுப்பது அறிவுக்கு ஒவ்வாதது!

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அமெரிக்காவுடன் கண்ணியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயங்கக் கூடாது என்றும், பேச்சுவார்த்தையை மறுப்பது அறிவுக்கு ஒவ்வாதது என்றும் கூறியுள்ளார்.

1 Min Read
உலகம்

காசா: உயிரிழப்பு 72,819 ஆனது; 70% ஆக்கிரமிப்புக்கு நேதன்யாகு உத்தரவு

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72,819 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 70% காசாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

சிக்கிம் மாநில தினம்: பிரதமர் மோடி வாழ்த்து – சிறப்பு செய்தி

சிக்கிம் மாநிலத்தின் 50-வது தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கிமின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

1 Min Read
உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐ.எஸ். தளபதி சுட்டுக்கொலை!

நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை உறுதிப்படுத்தினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?