கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். பின்னர், கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான 'கிளிப் ஹவுஸ்'ஸை அவர் காலி செய்தார்.
இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த பினராயி விஜயன், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்குவதற்கு முடிவெடுத்தார். இதற்கிடையில், அவர் டெல்லி சென்று கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு திருவனந்தபுரம் திரும்பிய பினராயி விஜயன், பேக்கரி சந்திப்பில் உள்ள 2 மாடி வாடகை வீட்டிற்குச் சென்றார். அவரை முன்னாள் அமைச்சரும், அவரது மருமகனுமான பி.ஏ. முகமது ரியாஸ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சிவன்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பினராயி விஜயனை கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்தால், அந்தப் பதவிக்குரிய அதிகாரப்பூர்வ இல்லமான 'கண்டோன்மென்ட் ஹவுஸ்'ஸில் அவர் குடியேற வாய்ப்புள்ளது.