MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது: பினராயி விஜயன் ஆவேசம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது: பினராயி விஜயன் ஆவேசம்

இந்தியா

ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறியது: பினராயி விஜயன் ஆவேசம்

Admin
Last updated: மே 27, 2026 5:26 மணி
Admin
Share
SHARE

கேரளாவில் சி.எம்.ஆர்.எல். நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், 'நீண்ட காலமாக அமலாக்கத்துறை என் வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை ராகுல் காந்தி போன்ற சிலருக்கு பெரும் திருப்தியை அளிக்கும் என நான் உணர்கிறேன். பினராயி விஜயனின் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? என்பதே ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி. பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளன. தங்கள் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் மீதான அமலாக்கத்துறையின் இந்தத் தலையீடு தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. இவை எதுவும் எங்களை அழித்துவிடாது. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'உள்ளூர் மக்கள் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கே வெளிப்படுத்தப்பட்டன. எதிரிகள் என்னைத் தாக்கத் தயாரான போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவுதான் எனக்குக் கிடைத்தது. அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதைத்தான் தோழர்கள் இன்று நிரூபித்துள்ளனர். இதுதான் நமது பலம். எதையும் எதிர்கொள்ள நாம் ஒன்றிணைவோம்' என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் வீட்டில் சோதனை முடித்து புறப்பட்ட அமலாக்கத்துறை வாகனம் மீது சி.பி.எம். கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த திடீர் சோதனைகள் மற்றும் அதைத் தொடர்ந்த தாக்குதல்கள் கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் மத்தியில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ED RaidPinarayi Vijayanஅமலாக்கத்துறை சோதனைகேரளா அரசியல்பினராயி விஜயன்ராகுல் காந்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆர்சிபி வெற்றிக்கு விராட் கோலியின் Pep Talk தான் காரணம்: தினேஷ் கார்த்திக்
Next Article பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை: ஸ்டாலின் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ₹1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 118 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,150 கோடி ஆகும். இது தொடர்பாக 3 பேர்…

1 Min Read
இந்தியா

மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் மாணவர்​களின் தற்​கொலை எண்​ணிக்கை முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் 14,488-பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது முந்​தைய ஆண்டை

1 Min Read
இந்தியா

மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் ஹைப்ரிட்: இந்தியாவில் புதிய சொகுசு கார் அறிமுகம்

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் பிளக்-இன் ஹைப்ரிட் கார் அறிமுகம். 5.7 வினாடிகளில் 100 கிமீ வேகம், லிட்டருக்கு 32.33 கிமீ மைலேஜ், 14.4 அங்குல டச்…

1 Min Read
இந்தியா

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?