வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 நிஷா ஒவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 'நிதி ஆப்கே நிகத்' என்றழைக்கப்படும் வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற சிறப்பு முகாம் நாளை (புதன்கிழமை) சென்னை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட 10 முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
சென்னையில், தியாகராயநகரில் உள்ள ஓட்டல் ரெசிடென்சி, அண்ணாநகர் மேற்கில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை, கும்மிடிப்பூண்டி சிப் காட் தொழிற்பேட்டையில் உள்ள மிட்சுபா இந்தியா பிரைவேட் நிறுவனம், காஞ்சீபுரம் பெரியார் நகரில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம், மற்றும் தாம்பரம் மெப்ஸ்-ல் உள்ள மெப்ஸ் மாநாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த சிறப்பு முகாம்களில், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் குறைகளை முதலாளிகளிடம் இருந்து பெற்று நிவர்த்தி செய்துகொள்ளலாம். மேலும், தொழிலாளர்களுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படும். சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முகாமில் பங்கேற்க விரும்புவோர், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeVqvdARtdgVj11FgH4aP1DICCW08OAFGA-k2alOMdDNTxwMQ/viewform?usp=sharing-amp;ouid=106859029795621361670 என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தில் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
