MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

Admin
Last updated: May 15, 2026 3:24 pm
Admin
Share
SHARE

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் திடீரென ஏற்பட்ட லிட்டருக்கு ரூ.3 உயர்வு, மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 'மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103.98 ஆகவும், டீசல் விலை ரூ.95.50 ஆகவும் உயர்ந்துள்ளது. இது லிட்டருக்கு முறையே ரூ.3.14 மற்றும் ரூ.3.11 அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் 100.77 ரூபாயாகவும், டீசல் 93.67 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் இதேபோல் விலை உயர்வு பதிவாகியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், "மோடி அரசின் தவறான கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரூ.3 விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை தவணைகளில் வசூலிப்பார்கள்" என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசின் தலைமைத்துவ நெருக்கடி, தொலைநோக்குச் சிந்தனையின்மை மற்றும் திறமையின்மையே காரணம் என சாடியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், மத்திய அரசு மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.43 லட்சம் கோடி வருவாய் ஈட்டியும், தற்போது பணவீக்கத்தின் சுமையை மக்கள் மீது திணிப்பது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் விலக்கு அளிக்கப்பட்டபோது, அமெரிக்காவிடம் அனுமதி கேட்டு யாசிக்க வேண்டிய நிலைக்கு நாட்டை மோடி அரசு கொண்டு வந்தது ஏன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Petrol Price Hikeஎரிபொருள் விலைடீசல் விலைபெட்ரோல்மோடி அரசுராகுல் காந்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வெள்ளியங்கிரி மலை ஏற மருத்துவ சான்று கட்டாயம்: ஆன்லைன் முன்பதிவு அறிமுகம்!
Next Article பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அன்புமணி கண்டனம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ பயணத்தில், பாதுகாப்பு, பெட்ரோலியம், எல்பிஜி…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா, டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை தொட்டிலில்…

1 Min Read

அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு

அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்; அவருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!Published by:Last Updated:Apr 28, 2026 4:02 PM ISTமீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கோப்பு படம்மேற்கு…

2 Min Read
இந்தியா

பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

வெளிநாடு இந்தியா பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்... சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?