MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

தமிழ்நாடு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

Sri Prem Kumar R
Last updated: ஜூன் 7, 2026 6:41 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த நீல நிற சூட்கேஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த அந்த சூட்கேஸ் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூட்கேஸ் அதிக பாரமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை திறந்து பார்த்தபோது, தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சிவப்பு நிற பாலிதீன் பையில் சுற்றப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த உடலின் கை, கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்டிருந்தன. உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை சூப்பிரண்டு ராஜன், சென்னை கோட்ட பாதுகாப்பு அதிகாரி ஜெயப்பிரகாஷ், புளியந்தோப்பு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ரயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் 'ஜான்சி' வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சூட்கேஸ் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், ரயில் நிலையத்தின் வெளிப்புறமாக ஓடி பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலைய நடைமேடையில் நின்றுவிட்டது. தலை, கை, கால்கள் இல்லாத வாலிபர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த இருவர், தலை, கை, கால்கள் இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் அமீர் அலி என்பதும், உடலை கொண்டு வந்து போட்டது அவரது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Peramburகொலைசடலம்சென்னைபெரம்பூர்ரயில் நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டில் 24×7 ஆன்லைன் பத்திரப்பதிவு: இனி வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்!
Next Article மம்தா பானர்ஜிக்கு வழிவிட யூசுப் பதான் ராஜினாமா? எம்பி மறுப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தஞ்சையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு: பரபரப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு, நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பசுமை மின்சார உற்பத்தி திறனை அதிகரிக்க, ஐந்து புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம் அருகே பயங்கரம்: அரசு பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் விசாரணை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?