MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்
அரசியல்

பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்

Admin
Last updated: May 26, 2026 2:11 pm
Admin
Share
SHARE

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, விசிகவினர் வழிமறித்து தாக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை 6-வது கட்டமாக மேலமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் இன்று நடத்தினார். இதற்காக பெரம்பலூரில் இருந்து திமுகவினர் காரில் குன்னத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் காத்திருந்த விசிகவினர், திமுகவினர் வந்த காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகராறு முற்றி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீஸார், இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி லலித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விசிகவை விமர்சனம் செய்ததால் கோபமடைந்த விசிகவினர், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் திமுகவினரே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsதிமுகபெரம்பலூர்மோதல்விசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
Next Article வீரர்களின் குடும்பத்தினர் மீது இணையவழி தாக்குதல்: ஆகாஷ் சோப்ரா கண்டனம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

கூடலூர் அருகே யானை தாக்கி மாணவன் உயிரிழப்பு: மக்கள் மறியல்

கூடலூர் அருகே யானை தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, வனவிலங்கு தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
அரசியல்

குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர்…

1 Min Read
அரசியல்

சூரியக் கட்சி சீனியர்: தொகுதியில் தோல்வி ஏன்? ‘ஹேப்பி’ மகனின் புலம்பல்!

சூரியக் கட்சி சீனியர் ஒருவர் தனது தொகுதியில் தோல்வியடைந்ததன் பின்னணி குறித்தும், 'ஹேப்பி' மகனின் புலம்பல் குறித்தும் விரிவான அலசல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?