பப்பாளிக்காயிலிருந்து வெளிவரும் பால் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது உடல் எடை கட்டுக்குள் இருக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யவும், வாய்ப்புண், சேற்றுப்புண், முகப்பரு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்கள், வாரம் ஒருமுறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இது தவிர, பப்பாளி மூலம் நம் உடல் பெறும் நன்மைகள் ஏராளம்.
சில பெண்களுக்கு மாதவிடாய் சீராக வராமல் இருக்கும் பட்சத்தில், சமைத்த பப்பாளிக்காயை இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும். மேலும், பப்பாளிக்காயின் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, பாசிப்பயறு மற்றும் தேங்காய் சேர்த்து பொரியலாக்கி இரண்டு நாட்கள் சாப்பிட்டால், மறுநாள் மாதவிடாய் சுழற்சி சீராகும்.
பப்பாளிக்காயை அரைத்து சாறாக்கியும் குடிக்கலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டிக்கு மேல் எடுக்கக்கூடாது. இது தவிர, வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பப்பாளிக்காயில் இருந்து வெளிவரும் பால் ஒரு சிறந்த கைவைத்தியமாகும். பப்பாளிக்காயை நறுக்கும்போது வெளிவரும் பாலை வாய்ப்புண்ணின் மீது தடவினால், புண் விரைவில் ஆறும்.
கால் பாதங்களில் ஏற்படும் சேற்றுப்புண், பாத எரிச்சல், மற்றும் வறண்ட பாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் பப்பாளிக்காய் பால் நிவாரணம் அளிக்கும். பப்பாளிக்காயிலிருந்து பெறப்படும் பாலுடன், சம அளவு பசும்பாலை காய்ச்சாமல் கலந்து, சேற்றுப்புண் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) வரை தடவி வந்தால், நாள்பட்ட சேற்றுப்புண்ணும் குணமாகி, பாதங்கள் அழகாகும்.
மேலும், பப்பாளியை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால், பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள் விரைவில் நீங்கும். உடல் பருமன் குறைய விரும்புபவர்கள், எந்தவிதமான உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், அவர்களுக்கு பப்பாளிக்காய் பெரிதும் உதவும்.
இவ்வாறு பப்பாளிக்காய், அதன் காயில் இருந்து வெளிவரும் பால் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனை முறையாக பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். பப்பாளிக்காயின் மருத்துவ குணங்கள் பலராலும் அறியப்படாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி பல நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
