MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஊட்டி மலர் கண்காட்சி: 10 லட்சம் நாற்றுகள், 26 அலங்காரங்கள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஊட்டி மலர் கண்காட்சி: 10 லட்சம் நாற்றுகள், 26 அலங்காரங்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஊட்டி மலர் கண்காட்சி: 10 லட்சம் நாற்றுகள், 26 அலங்காரங்கள்!

தமிழ்நாடு

ஊட்டி மலர் கண்காட்சி: 10 லட்சம் நாற்றுகள், 26 அலங்காரங்கள்!

Admin
Last updated: மே 18, 2026 8:30 காலை
Admin
Share
SHARE

நீலகிரி மாவட்டம் ஊட்டி, இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நிலவும் இதமான காலநிலை காரணமாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தேர்தல் காரணமாக ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, குன்னூரில் பழ கண்காட்சி மட்டுமே நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 14-ஆம் தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கப்பட்டது. இதில் 2 லட்சம் ரோஜா மலர்களால் பறவைகள் வடிவ அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு ரசித்து வருகின்றனர். அதே சமயம், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கண்காட்சி வரும் 28-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும். நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இக்கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியில், ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்ளிட்ட 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகளாக நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மலர் மாடம் உள்ளிட்ட இடங்களில் 50 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன.

தமிழகத்தின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவாயில் போன்று, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்னேசன் மலர்கள் மற்றும் பிற மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊட்டி மலை ரயில் என்ஜின், மாமல்லபுரம் கோவில், திருவாரூர் தேர் உள்ளிட்ட 26 மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்கும் மலர் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான மலர்களால் இந்த அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கள்ளிச்செடி மாளிகை, கண்ணாடி மாளிகை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளையும் குழந்தைகளையும் கவரும் வகையில், தாவரவியல் பூங்கா வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த முறை 11 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Ooty Flower ShowTamil Nadu Tourismஊட்டிநீலகிரிமலர் கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பிய ராஜேந்திர சோழன் செப்பேடுகள்!
Next Article மக்கள் தொகை கணக்கெடுப்பு: நாடு முழுவதும் தீவிர ஏற்பாடுகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசுகிறார்

தண்ணீர் திறக்காவிட்டால் வெள்ளத்தில் அடித்து செல்வோம்: சிவக்குமார் திடீர் மனமாற்றம்

கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காவிட்டால் இயற்கையே அழித்துவிடும் என…

ஆகஸ்ட் 1, 2026

ஆந்திராவில் ரூ.18,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய…

ஆகஸ்ட் 1, 2026

கூடங்குளம் அணு உலைகள்: செலவு 55% அதிகரிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும்…

ஆகஸ்ட் 1, 2026

கேரளாவில் கனமழை: 6 பேர் உயிரிழப்பு, 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்த…

ஆகஸ்ட் 1, 2026

கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பல்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி மற்றும்…

ஆகஸ்ட் 1, 2026

You Might Also Like

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
தமிழ்நாடு

அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: விஜய்யின் முடிவுக்கு காத்திருப்பு!

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவதற்கான அழைப்பு வந்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என த.வெ.க. தலைவர் விஜய்யே முடிவெடுப்பார் என கிரிஷ் சோடங்கர்…

2 Min Read
தமிழ்நாடு

ஆம்பூரில் அதிர்ச்சி: நாய்க்கு வைத்த கோழி இறைச்சி சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு!

ஆம்பூரில், நாய்க்கு வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியை தவறுதலாக சாப்பிட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

பிறந்தநாள் விழா ரத்து: வைகோ அறிவிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது 83வது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 'வைகோ 83' என்ற பெயரில் எந்த பிறந்தநாள் விழாவையும் கொண்டாட வேண்டாம் என…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?