ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் மருத்துவர் ஒருவரை, டீ கொண்டு வந்த நர்ஸ் ஒருவர் மிரட்டி ரூ.2 கோடி பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த நர்ஸ் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வீடியோ வெளியிட்டு, மருத்துவர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பார்மர் நகரில் 65 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கமலா என்ற நர்ஸ் அங்கு பணிக்குச் சேர்ந்தார். இந்நிலையில், அந்த நர்ஸ், மருத்துவரின் தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை திருடி, அவற்றை வெளியிடுவதாகவும், பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டி, அவரிடமிருந்து சுமார் ரூ.2 கோடி வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார்.
இது குறித்து பார்மர் நகர் காவல் நிலையத்தில் மருத்துவர் புகார் அளித்தார். புகாரின் பேரில், நர்ஸ் கமலா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதற்கிடையே, நர்ஸ் கமலா நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மருத்துவர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், 'அந்த மருத்துவர் ஒரு தொடர் கற்பழிப்பு குற்றவாளி. கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளிகளையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். ஆசைவார்த்தை கூறி பெண்களை மயக்குவதில் அவர் கில்லாடி. பெண்களை அவரிடம் அழைத்துச் செல்ல மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களும் உடந்தையாக உள்ளனர். இது குறித்து சில பெண்கள் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், பணம் கொடுத்து அந்த புகார்களை அவர் முடித்துள்ளார்' என்று கூறியுள்ளார்.
தன்னுடைய குற்றச்சாட்டுகள் எதையும் போலீசார் உறுதிப்படுத்தவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் எதையும் போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், மருத்துவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'நர்ஸ் கமலா கடந்த 2016 டிசம்பர் முதல் எனது மருத்துவமனையில் பணிபுரிந்தார். பெரும்பாலும் இரவு நேர பணியில் இருந்தார். தேனீர் தயாரிக்கும் காரணத்தைக் கூறி மருத்துவமனையில் 4-வது மாடியில் உள்ள எனது அறைக்கு வருவார். அப்போது, எனக்குத் தெரியாமல் எனது செல்போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை தனது போனில் எடுத்தார். அதை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.2 கோடி வரை பணம்பறித்தார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நர்ஸ் கமலா மீது மருத்துவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட வீடியோ குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

