MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!

தமிழ்நாடு

100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!

Admin
Last updated: ஜூலை 1, 2026 11:11 காலை
Admin
Share
SHARE

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, 'விக்சித் பாரத் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்' (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) – VB-G RAM G) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் 2026 ஜூலை 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமலுக்கு வரும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், திறன்சாரா உடல் உழைப்புப் பணியை விருப்பத்துடன் மேற்கொள்ளும் கிராமப்புற குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்வளப் பாதுகாப்பு, கிராமப்புற அடிப்படை உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு, மற்றும் தீவிர வானிலை மற்றும் பேரிடர் பாதிப்புகளைத் தணிக்கும் சிறப்புப் பணிகள் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வயது வந்த உறுப்பினர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரருக்கு வேலைவாய்ப்பு உதவித்தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலியில் நான்கில் ஒரு பங்கும், மீதமுள்ள காலத்திற்கு பாதியும் வழங்கப்படும். வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் கூலி வழங்கப்பட வேண்டும். கூலி தாமதமானால், நாளொன்றுக்கு 0.05% இழப்பீடு வழங்கப்படும்.

வேலை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பயனாளிகளாக இருக்க வேண்டும். வேலை, விண்ணப்பதாரர் வசிக்கும் கிராமத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வழங்கப்பட வேண்டும். அதற்கு வெளியே வழங்கப்பட்டால், போக்குவரத்து செலவிற்காக கூலியுடன் கூடுதலாக 10% வழங்கப்படும். தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு வேலை உறுதி அட்டை வழங்கப்படும்.

பணியிடங்களில் தினசரி வருகை பதிவு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, ஜியோ-டேக்கிங், மேலாண்மை தகவல் அமைப்பு (MIS), சமூகத் தணிக்கை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும். கிராம சபை மூலம் பணிகள் கண்காணிக்கப்பட்டு, சமூக தணிக்கை நடத்தப்படும். அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். புகார் தீர்வு அமைப்பு செயல்படும், புகார்கள் 7 வேலை நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.

இந்தத் திட்டம் மத்திய நிதியுதவி திட்டமாக செயல்படுத்தப்படும். இதில் மத்திய அரசு 60% நிதியையும், மாநில அரசு 40% நிதியையும் வழங்கும். வேலையில்லா உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டிற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:100 நாள் வேலைMGNREGAViksit Bharatதமிழக அரசுபுதிய திட்டம்வேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக திருச்சி சிவா குடும்பத்தினர் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்!
Next Article திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே சுதந்திர தின விழாவை புறக்கணித்த செய்தி

சுதந்திர தின விழா: ராகுல், கார்கே அடுத்தடுத்த ஆண்டு புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை, ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும்…

ஆகஸ்ட் 16, 2026

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த முடிவு மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என…

3 Min Read
பரமத்திவேலூர் ஏலச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள வாழைத்தார்கள்
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூரில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திமுக அரசின் ஊழல்: எல்.முருகன் கண்டனம்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்த தவெக அரசு உடனடியாக முனைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் ஊழல்களை…

1 Min Read
தமிழ்நாடு

ஈஷா யோகா மையத்தில் தொடர் மரணங்கள்: சிபிசிஐடி விசாரணைக்கு பெ.சண்முகம் கோரிக்கை

ஈஷா யோகா மையத்தில் தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து வருவதாகவும், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?