MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

தமிழ்நாடு

நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ரோஷ்னி (18), நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் தீவிர பயிற்சி பெற்று வந்த மாணவி, நீட் மறுதேர்வு நெருங்கி வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ரோஷ்னி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 21) நடைபெறவிருந்த நீட் மறுதேர்வுக்காக சொந்த ஊருக்கு வந்த மாணவி, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் இந்த தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு முன்னர், மே 3 அன்று நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து போன்ற நிகழ்வுகளும் மாணவர்களின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த அனுகீர்த்தனா, சேலத்தைச் சேர்ந்த கோபிகா போன்ற மாணவிகளும் நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே விபரீத முடிவுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamStudent SuicideTamil Naduதர்மபுரிநீட் தேர்வுமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் 35,000 பேர் யோகா பயிற்சி
Next Article வைகோ தவெக பக்கம் தாவுகிறாரா? மல்லை சத்யா பகீர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர்களுக்கு சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சனாதனம் என்றால் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

சனாதன தர்மம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். இது சமத்துவமின்மையை எதிர்ப்பது பற்றியே என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க…

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

வெற்றி அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை: சீமான் விமர்சனம்

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை என சீமான் விமர்சனம். முக்கிய துறைகளுக்கு நிதி குறைப்பு, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து கண்டனம்.

3 Min Read
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறியது ஏன்? துரை வைகோ விளக்கம்

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றபோதே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதாகத் தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறை த.வெ.க அரசுக்கு சவாலாக உள்ளதாகவும்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?