பிரபலமான நடிகை மௌனி ராயும், அவரது கணவர் சூரஜ் நம்பியாரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் 'அன்பாலோ' செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக, இவர்களது திருமண வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
மௌனி ராயும் சூரஜ் நம்பியாரும் முதன்முதலில் 2019 புத்தாண்டு தினத்தன்று துபாயில் சந்தித்தனர். மூன்று ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி, 2022 ஜனவரியில் கோவாவில் உள்ள ஹில்டன் ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டது. இவர்களது திருமணம் மலையாள மற்றும் பெங்காலி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மௌனி ராய், 'நாகினி' தொலைக்காட்சித் தொடர் மூலம் நாடு முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அதன் பிறகு 'பிரம்மாஸ்திரா' உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் உருவான 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் நம்பியார், துபாயில் முதலீட்டு வங்கி அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் செயல்பட்டு வருகிறார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் விவாகரத்து குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மௌனி ராய் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.