MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது

தமிழ்நாடு

காதலனுக்காக 129 பவுன் நகைகள் திருட்டு: சிறுமி, 5 பேர் கைது

Fernandez
Last updated: ஜூலை 8, 2026 2:30 மணி
Fernandez
Share
காதலனுக்காக 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்
காதலனுக்காக 129 பவுன் நகைகளை திருடிய சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள்.
SHARE

சென்னையில், காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி, வீட்டில் இருந்த சுமார் 129 பவுன் தங்க நகைகளை திருடி கொடுத்த 18 வயது சிறுமி மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (51), தனது அண்ணன் இறந்துவிட்டதால், அவரது அண்ணி மற்றும் மூன்று மகள்களை கவனித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, தனது சொந்தமான 22 பவுன் தங்க நகைகளை அண்ணியிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறு கூறியுள்ளார். சமீபத்தில், வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, பன்னீர்செல்வம் கொடுத்த 22 பவுன் நகைகள் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான 107 பவுன் நகைகள் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டின் கதவோ, பீரோவோ உடைக்கப்படாததால், வீட்டில் உள்ள நபர்கள் யாரேனும் நகைகளை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், பன்னீர்செல்வத்தின் அண்ணனின் மூன்றாவது மகளான 18 வயது சிறுமியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தொடர் விசாரணையில், கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின்போது, சிறுமி தற்காலிகமாக வேலை செய்த இடத்தில், செனாய் நகரைச் சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கார்த்திக், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி, சிறுமியிடம் நயமாக பேசி பணம் கேட்டுள்ளார்.

காதலனின் வார்த்தைகளை நம்பிய சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். கார்த்திக் தொடர்ந்து பணம், நகை என கேட்க, வீட்டில் இருந்த 129 பவுன் தங்க நகைகளையும் சிறுமி அவனிடம் கொடுத்துள்ளார். ஏமாந்த சிறுமியிடம் இருந்து பெற்ற நகைகளை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும், விற்றும் பணமாக்கியுள்ளனர்.

அந்த பணத்தில், அவர்கள் புதிதாக கார், இருசக்கர வாகனம், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான ஆவடியைச் சேர்ந்த குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47), சூர்யா (28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 பவுன் தங்க நகைகள், ஒரு செல்போன், ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடி கொடுத்த சிறுமியின் இந்த விபரீத செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:129 பவுன் நகைகள்Chennai PoliceGold TheftTamil Nadu Crimeகாதலனுக்காக திருட்டுசென்னை செய்திகள்தங்க நகைகள் திருட்டுமதுரவாயல் போலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை
Next Article முதல்வர் விஜய் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு முதல்வர் விஜய் அதிரடி: நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைய உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குதிரை பேரத்தில் விஜய் ஈடுபடவில்லை – வைகோ கருத்து

தமிழக முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்பது எனது கருத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்களுக்கு பதிலளித்த அவர்,…

1 Min Read
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு: விரைவில் அறிவிப்பு?

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

2 Min Read
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

பெண்களை அவதூறாகப் பேசுவோருக்கு உதயநிதி கைது தக்க பாடம் – வானதி சீனிவாசன்

சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. பெண்களை அவதூறாகப் பேசுவோருக்கு உதயநிதி கைது தக்க பாடம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.

மும்மொழித் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை என்றும், இது ஒன்றிய அரசின் தந்திரமான அறிவிப்பு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்பும் வகையில் இந்த…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?