மின்னல் வேகத்தில் மனுக்கள்: அசத்தும் அமைச்சர் ராஜ்மோகன்!

மக்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்ய உதவும் வகையில், அமைச்சர் ராஜ்மோகன் அலுவலகத்தில் புதிய E-Petition System அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ராஜ்மோகனின் அறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மனு பெறும் கருவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம், மனுதாரர்கள் நேரடியாக டிஜிட்டல் முறையில் தங்கள் மனுக்களைப் பதிவு செய்ய முடியும். இதனால், காத்திருப்பு நேரமும் நடைமுறைச் சிக்கல்களும் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சி, மக்களின் கோரிக்கைகள் விரைவாக சம்பந்தப்பட்ட துறைகளுக்குச் சென்றடைய பெரிதும் உதவும். மேலும், அப்பாயின்மெண்ட் விவரங்கள் போன்ற தகவல்கள் மனுதாரரின் கைபேசிக்கு குறுந்தகவலாக வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 'கொள்கைகளை விட்டுக் கொடுத்து நிதி வாங்க மாட்டோம். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டையும் சமமாக அரசு கருதும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவோம். கல்வித்துறையில் தேவையற்ற பண இழப்புகளைக் குறைப்போம்' என்று உறுதியளித்தார்.

மேலும், பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்யும் தவெக நிர்வாகிகளை எந்த சமரசமும் இன்றி கட்சியில் இருந்து விலக்குவோம் என்றும், இது தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த அறிவிப்புகள் கல்வித்துறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version