குதிரை பேரம் திமுகதான்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

திமுக, அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும்தான் இருக்கப்போகிறார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'பணம் கொடுத்து ஒருவரை வாங்கினால் தான் குதிரை பேரம். தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் பதவி விலகல் செய்துவிட்டு வருவது குதிரை பேரம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு' என்று குறிப்பிட்டார்.

தானாக ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை குதிரை பேரம் என்பதா என்றும், யாரையும் திமுக அழைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பதவி விலகல் செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்க முடியாது என்று எப்படி சொல்ல முடியும் என்றும் அவர் கேட்டார்.

குதிரை பேரம் என்றால் என்னவென்று தெரியுமா? ஆர்.எஸ். பாரதி டைம் பாஸுக்காக சிபிஐக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார். குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதானே தவிர, தவெக அல்ல. தற்போது வரை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திமுக உள்ளது.

தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் செய்ததால் செந்தில் பாலாஜி உடன் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மின் விநியோகம் எப்போதும் தனியார்மயம் ஆகாது என்றும், கல்வி விவகாரத்தில் ஆளுநரும், மத்திய அரசும் விருப்பத்தை சொல்லலாம் என்றும், தவெக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறையில் அனைத்து புகார்களும் விரைவாக விசாரிக்கப்படும் என்றும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version