வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக த.லோகேஷ் தமிழ்செல்வன் பொறுப்பேற்றுள்ள நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலராக ஜெ.குமரகுருபரன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில், அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பத்திரப்பதிவு துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பத்திரப்பதிவு செய்ய வருவோரை அதிக நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்றும், முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசல் இன்றி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், எந்த வகையிலும் லஞ்சம் வாங்கக்கூடாது என்றும், லஞ்சம் வாங்குவது அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கடுமையாக எச்சரித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் எஸ்.நாகராஜன், பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையில், கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.


Dear sir,,
Salem district Macheri sub register office
Oru single sale deed Doucement 4actre pana total cost sub register Selva Mani 25lakh paymeny ketkaranga,, Epadi oru Doucement ku 25lakh na Ethu mathiri Salem district la evlo Doucement irugu, Etha Yatho Solanum sola Enkita proper record irugu lancham vangama register pana mudiuma solunga all documents submit panaran Lokesh sir
Thank you