MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

தமிழ்நாடு

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதிக்கு (17 வயது) என்ற மகள் இருந்தார். யாழினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அத்துடன் பிளஸ்-2 பொதுத்தேர்வையும் எழுதினார். அவர் நன்றாக படித்து வந்ததால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் யாழினி தேர்ச்சி பெற்றதுடன் 454 மதிப்பெண் பெற்று இருந்தார். தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த அவர் தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது புலம்பினார். இதனால் தனது மகளுக்கு நர்மதா ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவி யாழினி தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நர்மதா, உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகளை மீட்டு கணபதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே யாழினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வாங்க.. இவர் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் கருத்து
Next Article சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும், 'மேக் இன் இந்தியா' போன்ற…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் ஆணையம்: புதிய நிபந்தனை, மீறினால் லட்சங்களில் அபராதம்!

ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது. விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பைப் பொறுத்து 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை…

1 Min Read
தமிழ்நாடு

ஆளுநர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மாநில ஆளுநர் உரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. வன்கொடுமைகளை தடுப்பது போன்ற விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசுக்கு எதிராகப் பேசிய திமுக இளைஞர் கைது செய்ய முயன்ற விவகாரத்தில், உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

2 Min Read
தமிழ்நாடு

22 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்? சி.வி.கட்சியில் பரபரப்பு!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி உட்பட 22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பு மனு அளித்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?