நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அட்டடி கிராமத்தில், ஒரு குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை குடியிருப்புக்குள் நுழைந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.