MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை கோனியம்மன் கோவில்: உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் மீது வழக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை கோனியம்மன் கோவில்: உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் மீது வழக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவை கோனியம்மன் கோவில்: உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் மீது வழக்கு

தமிழ்நாடு

கோவை கோனியம்மன் கோவில்: உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் மீது வழக்கு

Fernandez
Last updated: ஜூலை 25, 2026 12:14 மணி
Fernandez
Share
கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
SHARE

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக நான்கு ஊழியர்கள் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோனியம்மன் கோவில் வளாகத்தில் மொத்தம் 16 உண்டியல்கள் பக்தர்களின் காணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் 9 நிரந்தர உண்டியல்களும், தேர் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட 6 தற்காலிக உண்டியல்களும் அடங்கும். மேலும், திருப்பணிக்காக பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்க ஒரு உண்டியலும் உள்ளது.

கடந்த 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது, ஒரு உண்டியலில் இருந்த பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களுடன் மறைத்து வைத்துள்ளனர். இந்த முறைகேட்டை அதிகாரிகள் கவனிக்கவில்லை.

தற்காலிக உண்டியல்களை டிராலியில் எடுத்துச் செல்லும் போது, கலையரங்கத்துக்கு பின்புறம் ஒரு ஊழியர் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து தனது பையில் மறைத்து வைப்பதை ஒரு பக்தர் நேரில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் இது குறித்து சென்னையில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், உண்டியல் பணத்தை பாலசுப்ரமணியன் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும், அதில் சுமார் ரூ.31,000 இருந்ததாகவும், பின்னர் அந்த தொகையை நான்கு பேரும் பிரித்துக் கொண்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதால், சம்பந்தப்பட்ட நான்கு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்ட பிறகு, துறை ரீதியான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Employee TheftKoneeyamman TempleKovaiTemple FundsTheftஉண்டியல் பணம்ஊழியர்கள்கோவைகோனியம்மன் கோவில்திருட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் ரயில் பெட்டிகளில் சோலார் மின் உற்பத்தி: ரயில்வேயின் பசுமை முயற்சி
Next Article சென்னையில் பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட நேபாள வாலிபர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நேபாள வாலிபர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கொண்டாடும் சிஜேபி போராட்டக்காரர்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்…

ஜூலை 25, 2026

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில்…

ஜூலை 25, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே…

ஜூலை 25, 2026

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த…

ஜூலை 25, 2026

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.…

ஜூலை 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

த.வெ.க. அமைச்சரவை உத்தேச பட்டியல்..!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை சமர்பித்ததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை…

1 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18 வயது). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண்…

1 Min Read
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை
தமிழ்நாடு

மயிலாடுதுறை கோவில் யானைக்கு ஓய்வு: ஐகோர்ட் மனு தள்ளுபடி

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானைக்கு ஓய்வு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. யானைக்கு 57 வயதே ஆவதால் ஓய்வு தேவையில்லை என…

1 Min Read
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சாலை அமைக்காமலேயே பணம் எடுத்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 11 பேர் மீது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?