MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்
இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்

Admin
Last updated: May 26, 2026 7:09 pm
Admin
Share
SHARE

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, வி.டி.சதீசன் கேரளாவின் புதிய முதல் மந்திரியாக கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, வி.டி.சதீசன் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சென்றடைந்த அவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். சட்டசபை தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தலைவர்களுக்கு அவர் இந்த சந்திப்பின் போது நன்றி தெரிவித்தார்.

மேலும், முதல்-மந்திரி சதீசன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கேரளம் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாக சதீசன் தெரிவித்தார். மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, கேரளாவின் பாரம்பரிய நடன நாடகமான கதகளியை சித்தரிக்கும் ஒரு சிறிய நடனக் கலைஞரின் சிலையை முதல்-மந்திரி சதீசன் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக்குப் பிறகு, சதீசன் பிரதமரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Politicsஅரசியல்காங்கிரஸ்கேரளாபிரதமர் மோடிவி.டி.சதீசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள் இணைவது நம்பகத்தன்மையை பாதிக்கும் – திருமாவளவன்
Next Article எல்லை பாதுகாப்பில் பெண்களின் பங்கு ஆண்களை விட அதிகம் – அமித் ஷா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கல்வி அமைச்சர் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் போராட்டம் நடைபெற்றது.…

1 Min Read
இந்தியா

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடை

1 Min Read
இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய-திபெத் பெண்கள் குழு சாதனை!

இந்திய-திபெத் எல்லை காவல் படையின் முதல் பெண்கள் குழு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

உ.பி.யில் 5 நாளில் 4 குழந்தைகள்: சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலம்!

உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நீடித்த சுகப்பிரசவத்தில் அமீனா என்ற பெண் 4 குழந்தைகளை (2 ஆண், 2 பெண்) பெற்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?