கேரள சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், தற்போது வாடகை வீட்டிற்கு மாறியுள்ளார்.
டெல்லியில் நடந்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, திங்கள்கிழமை இரவு திருவனந்தபுரம் வந்த பினராயி விஜயன், நகரின் பேக்கரி சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள இரு மாடி வாடகை வீட்டில் குடியேறினார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனே, கேரள முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ இல்லமான Cliff House வளாகத்தை விட்டு அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கட்சி அவருக்குத் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்க ஏற்பாடு செய்ய முன்வந்தபோதிலும், அவர் தனது குடும்பத்துடன் இந்த வாடகை வீட்டிலேயே தங்குவதற்கு முடிவெடுத்துள்ளார்.
தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்ற பினராயி, கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால், அவருக்கு அந்தப் பதவிக்கான அதிகாரப்பூர்வ இல்லமான Cantonment House ஒதுக்கப்படும்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சிபிஎம் கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி, இந்தத் தேர்தலில் 140 இடங்களில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸின் யுடிஎஃப் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

