MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கரூர் வழக்கு: ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி – ஆர்.எஸ்.பாரதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கரூர் வழக்கு: ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி – ஆர்.எஸ்.பாரதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கரூர் வழக்கு: ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி – ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாடு

கரூர் வழக்கு: ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி – ஆர்.எஸ்.பாரதி

Admin
Last updated: ஜூலை 3, 2026 4:14 மணி
Admin
Share
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
SHARE

கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் முக்கிய குற்றவாளி என்றும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொறுப்பற்ற முறையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கரூரில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி ஆதவ் அர்ஜூனா பொய்யாகவும், புரட்டுமாகவும் பேசியுள்ளார் என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டதால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே ஆதவ் அர்ஜூனா அவ்வாறு பேசியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்தின் போது, திமுக தலைவர் தளபதி எடுத்த நடவடிக்கை மனசாட்சி உள்ளவர்களால் பாராட்டப்பட்டது. 41 பேர் இறந்தபோது முகத்தை மூடிக்கொண்டு ஓடி ஒளியாமல், மக்களுடன் துணை நின்று, உயிர்களைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்த ஒரே தலைவர் தளபதிதான் என்பதை மக்களும், தமிழ்நாடும் மறக்காது என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.

கரூர் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட SIT குழுவின் தலைவர், தற்போது உளவுத்துறை ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இது, திமுக அரசு நடுநிலையோடு செயல்பட்டதற்கான சாட்சி என அவர் சுட்டிக்காட்டினார். SIT விசாரணை ஒழுங்காக நடைபெற்றபோதும், அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டதாகவும், தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, சட்டம் தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை சென்று வந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும்போது, வழக்கின் விசாரணையை கெடுக்கும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். எனவே, இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டம் எல்லை மீறிச் செல்வதாகவும், அவர் யார் என்பது நாட்டுக்குத் தெரியும் என்றும், இந்த நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அவரது மனைவி மீதும் கேரளாவில் 928 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதியில் ஆய்வு செய்யச் சென்றபோது கைது செய்யப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், இதை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் அவர் கூறினார். இந்த அராஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும், இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக என்பது வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம், தீட்ட தீட்ட ஒளிரும் வைரம் என்பதை புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav ArjunaDMKKarur CaseRS Bharathiஆதவ் அர்ஜுனாஆர்.எஸ்.பாரதிகரூர் வழக்குதிமுகநீதிமன்ற அவமதிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நெல்லை தொண்டர் நயினார் கோவில் கும்பாபிஷேக விழா நெல்லை தொண்டர் நயினார் கோவில்: நூற்றாண்டு விழா கும்பாபிஷேகம்
Next Article அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார் முதல்வரை விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக கட்சித் தலைவர் நிதின் நவீன் தலைமையில் நடைபெற்ற தேசிய நிர்வாகக் குழு கூட்டம்

இளம் வாக்காளர்களை கவரும் பாஜக: புதிய வியூகம்

இளம் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் பாஜக புதிய பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளது. டெல்லியில்…

ஆகஸ்ட் 23, 2026

ராகுல் காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

1984 சீக்கிய கலவர வழக்கில் தண்டனை பெற்ற…

ஆகஸ்ட் 23, 2026

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

சர்வதேச பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: செப். 1 முதல் புதிய நடைமுறை

செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமான பயணிகளுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

மசினகுடி வனப்பகுதியில் உயிரிழந்த காட்டு யானை
தமிழ்நாடு

மசினகுடி வனப்பகுதியில் மூப்பு காரணமாக காட்டு யானை உயிரிழப்பு

மசினகுடி வனப்பகுதியில் வயது முதிர்வு காரணமாக ஒரு காட்டு யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம் இடமாற்றம்
தமிழ்நாடு

முதல்வர் அலுவலக இடமாற்றம்: ரூ.5 கோடி டெண்டர், 3 மாத காலக்கெடு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுகிறது. இதற்காக ரூ.5 கோடி டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு.

2 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

பேச்சை திரித்து ஆதாயம் தேடுகிறார்கள்: நயினார் நாகேந்திரன் விளக்கம்

முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். தனது பேச்சைத் திரித்து அரசியல் ஆதாயம்…

2 Min Read
தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் 'இந்திய அரசு'…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?