தமிழக முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் விஜய் மீது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, பண்பாடற்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் விஜயின் மனம் புண்படும்படி உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகளை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வள்ளுவர் வழியில் நாட்டை ஆண்ட கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி, இப்படிப்பட்ட தரமற்ற சொற்களைப் பயன்படுத்துவது, கலைஞர் அவர்களின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் செயல்' என்று குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக காதர் மொய்தீன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இப்படிப் பேசியது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக மக்கள் இந்த நாகரிகமற்ற பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய் மனம் புண்பட்டது: காதர் மொய்தீன் கண்டனம்
