முதல்வர் விஜய் மனம் புண்பட்டது: காதர் மொய்தீன் கண்டனம்

ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்

தமிழக முதல்வர் விஜய் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் விஜய் மீது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, பண்பாடற்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் விஜயின் மனம் புண்படும்படி உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகளை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். வள்ளுவர் வழியில் நாட்டை ஆண்ட கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி, இப்படிப்பட்ட தரமற்ற சொற்களைப் பயன்படுத்துவது, கலைஞர் அவர்களின் புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் செயல்' என்று குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக காதர் மொய்தீன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இப்படிப் பேசியது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக மக்கள் இந்த நாகரிகமற்ற பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version