டிகிரி முடித்த இளைஞர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. AAICLAS நிறுவனம், Security Screener (Fresher) பதவிக்கு மொத்தம் 158 காலியிடங்களை அறிவித்துள்ளது. திருச்சி, கோழிக்கோடு, உதய்பூர், பாட்னா, கொல்கத்தா மற்றும் டேராடூன் ஆகிய விமான நிலையங்களில் இந்த வேலைவாய்ப்புகள் உள்ளன.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் (பொது/OBC/EWS பிரிவினருக்கு) அல்லது 55% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினருக்கு) பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 27 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.
சம்பளம் பொறுத்தவரை, முதல் வருடம் ரூ.30,000, இரண்டாம் வருடம் ரூ.32,000, மூன்றாம் வருடம் ரூ.34,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ST/SC/Female/EWS பிரிவினருக்கு ரூ.100 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.750 ஆகவும் உள்ளது. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.05.2026 மற்றும் கடைசி தேதி 08.06.2026 ஆகும்.
விருப்பமுள்ளவர்கள் AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'Careers' அல்லது 'Recruitment' பகுதியில் 'Security Screener (Fresher) – 01/2026' அறிவிப்பைத் தேர்வு செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றி, ஆன்லைனில் கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுங்கள்.