MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - 50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!

சினிமா

50 ஆண்டுகளைக் கடந்த இளையராஜா: ரசிகர்களின் ஆத்மாவாக இசை!

Admin
Last updated: மே 16, 2026 1:31 மணி
Admin
Share
SHARE

இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணம் 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 'அன்னக்கிளி' திரைப்படம் வெளியாகி அரை நூற்றாண்டைக் கடந்த நிலையில், அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, தனது இசைப் பயணம் குறித்தும், ரசிகர்களின் அன்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

தற்போது இயக்குநர் பால்கி இயக்கும் படத்திற்கு இசையமைத்து வருவதாகக் கூறிய இளையராஜா, 'வருடம் தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர, நான் எங்கு இருந்து எப்படி வந்தேனோ, அப்படியே தான் இருக்கிறேன். எல்லோரும் இசைக் கடவுளாக என்னைப் பார்ப்பது பற்றி கேட்கிறீர்கள். அது, அவர்களின் அன்பைக் காட்டுகிறது. நான் இசையமைக்கும் போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. வெறுமையாகவே இருக்கும். கோயிலுக்குப் போவதை விட இசை மிகவும் புனிதமானது. அதனால்தான் மக்கள் என்னை என்னென்னவோ சொல்லிக் கொண்டாடுகிறார்கள். நான் இல்லாமல் போனாலும் அந்த கொண்டாட்டம் தொடரும் என்பது எல்லோருக்கும் தெரியும்' என்று குறிப்பிட்டார்.

'அன்னக்கிளி' படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்துப் பேசுகையில், 'ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் நான் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தேன். சுமார் 250 படங்களுக்கு மேல் பணிபுரிந்தாலும் எனக்கென்று பட வாய்ப்பு வந்தபோது, எப்படிப் பாடலைத் தொடங்குவது? என்று யோசித்துப் பார்த்தேன். மற்ற இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய போது எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்லை. ஆனால், எனக்கென்று வந்தபோது பல யோசனைகள் வந்தது. என்னைத் தனிக்காட்டில் விட்ட மாதிரி இருந்தது. 'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என பாடல் வரிகளை எழுதிவிட்டார்கள். பீச்சில் நடந்து கொண்டே பாடலுக்கான இசையை எப்படித் தொடங்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெண்ணின் விரகதாபத்தை இந்தப் பாடல் சொல்கிறது என்ற எண்ணத்தில், ஒரு ஹம்மிங்கை வைத்தேன். இதற்காகப் பல நாட்கள் யோசித்தேன். பிறகு எங்கு ஷாட் வைக்கப் போகிறார்கள் என்று யோசித்து இசை அமைத்தேன். ஒவ்வொரு பாடலையும் இப்படி இசை அமைத்துக் கொடுத்ததால்தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது' என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இயக்குநர் பால்கி, கே. பாக்யராஜ், பாடலாசிரியர் பா. விஜய் ஆகியோர் இளையராஜாவுடன் உடனிருந்தனர். 50 ஆண்டுகால இசைப் பயணத்திலும், ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருப்பது இளையராஜாவின் இசைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:50 YearsAnnakiliIlayarajaMusicஅன்னக்கிளிஇசைஇளையராஜா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article Hero Xtreme 125R: ஸ்டைல், மைலேஜ், விலை – இளைஞர்களை கவரும் பைக்!
Next Article ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

ஜனநாயகன் ஓடிடி உரிமை: மீண்டும் கடும் போட்டி!

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமைக்காக முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 Min Read
சினிமா

எங்கள் தங்கம்: சமந்தாவின் இரட்டை வேடம், குடும்ப டிராமா கலந்த படம்

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படம், அவரது இரட்டை வாழ்க்கை, குடும்பப் பின்னணி மற்றும் மர்மமான கடந்த காலத்தை மையமாகக் கொண்ட ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன்…

1 Min Read
சினிமா

மஞ்சு வாரியாரின் ‘ஹேப்பி லூப்’ பட பூஜை: புதிய பட அறிவிப்பு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், 'ஹேப்பி லூப்' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று (மே 27) சிறப்பாக…

1 Min Read
சினிமா

தயாரிப்பாளராக மீண்டும் மாரி செல்வராஜ்: புதிய படத்தில் அமீர், ஸ்வாசிகா!

இயக்குநர் மாரி செல்வராஜ், 'வாழை' படத்தை தொடர்ந்து, தனது உதவி இயக்குநர் அரவிந்த் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். அமீர், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?