இயக்குநர் மாரி செல்வராஜ், 'வாழை' படத்தை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்க களமிறங்கியுள்ளார். அவரது உதவி இயக்குநரான அரவிந்த் இப்படத்தை இயக்க உள்ளார்.
அமீர் மற்றும் ஸ்வாசிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். ஒரே கட்டமாக படத்தின் அனைத்து பணிகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை பணிகளை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் படப்பூஜை சிறப்பாக நடந்துள்ள நிலையில், மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'வாழை' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான மாரி செல்வராஜ், தற்போது மீண்டும் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இது அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்பு, 'வாழை 2' படத்தை தயாரித்து இயக்கும் திட்டத்திலும் மாரி செல்வராஜ் உள்ளார். இதில் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் போன்றோரும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அவரது உதவி இயக்குநர் அரவிந்த் இயக்கும் படத்தை அவர் தயாரிப்பது மேலும் சிறப்பு.
'விஜய்க்கு கதை சொல்லி… சூர்யா என்ட்ரி ஆகி…' – 'கருப்பு' உருவான கதை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி