MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குதிரை பேரம்: கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குதிரை பேரம்: கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - குதிரை பேரம்: கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்

தமிழ்நாடு

குதிரை பேரம்: கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்

Fernandez
Last updated: ஜூலை 19, 2026 10:54 காலை
Fernandez
Share
கரூரில் குதிரை பேரம் தொடர்பாக சீல் வைக்கப்பட்ட பைனான்ஸ் அலுவலகம்
கரூரில் குதிரை பேரம் தொடர்பான வழக்கில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்.
SHARE

குதிரை பேர விவகாரம் தொடர்பாக, கரூரில் உள்ள ஒரு பைனான்ஸ் அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது, குறிப்பிட்ட வகையில் செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எம்.எல்.ஏ மறுப்பு தெரிவித்தபோது, அவருக்கு மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிலரின் வாக்குமூலத்தின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த குதிரை பேர சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குதிரை பேரம் தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கரூர் சின்ன ஆண்டான் கோவில் சாலையில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைபான்ஸ் நிறுவனத்தில் காவல்துறையினர் இரவு முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்று காலை வரை நீடித்தது.

சோதனை நிறைவடைந்த பிறகு, காவல்துறையினர் அந்த பைனான்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். குதிரை பேரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதால், அதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dr. N. IlaiyarajaFinance OfficeHorse TradingKarurSealSenthil BalajiThiruvallikeni Policeகரூர்குதிரை பேரம்சீல்செந்தில் பாலாஜிடாக்டர் என். இளையராஜாதிருவல்லிக்கேணி போலீசார்பைனான்ஸ் அலுவலகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வெள்ளலூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன வெள்ளலூர் அகழாய்வு: 2000 ஆண்டுகள் பழமையான அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!
Next Article குடும்ப தகராறில் கொலை செய்யப்பட்ட ஆண்கள் குறித்த ஆய்வறிக்கை குடும்ப தகராறில் 6 மாதங்களில் 554 ஆண்கள் கொலை: அதிர்ச்சி அறிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள்

டெல்லியில் போராட்டம் வன்முறை: 70 பேர் கைது, 118 போலீசார் காயம்

டெல்லியில் சி.ஜே.பி அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் 70 பேர் கைது…

ஜூலை 21, 2026

அசாம் கனமழை: வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆனது

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்…

ஜூலை 21, 2026

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்தின் புதிய…

ஜூலை 21, 2026

ஆந்திராவில் கரோனா பரவல்: உயிரிழப்பு 4 ஆக உயர்வு

ஆந்திராவில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது.…

ஜூலை 21, 2026

மும்பையில் ஓடிபி இன்றி ரூ.78 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் மீது போலீஸ் விசாரணை

மும்பையில் உள்ள ஒரு தங்க நகை கடன்…

ஜூலை 21, 2026

You Might Also Like

நாசா அறிவியல் போட்டியில் பங்கேற்ற தமிழக மாணவர்
தமிழ்நாடு

நாசாவில் தமிழக மாணவர்: உலக அளவில் டாப்-100-க்குள் சாதனை

தமிழக மாணவர் ஒருவர் நாசா நடத்திய உலகளாவிய அறிவியல் போட்டியில் முதல் 100 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார். 80 நாடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட…

1 Min Read
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

நாமக்கல் கறிக்கோழி விலை உயர்வு: கிலோ ரூ.151 ஆனது

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.151 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை 650 காசுகளாக உள்ளது.

1 Min Read
தூத்துக்குடியில் இளைஞரை ஆயுதங்களுடன் விரட்டிய கும்பல் கைது
தமிழ்நாடு

தூத்துக்குடியில் வாலிபரை ஆயுதங்களுடன் விரட்டிய 6 பேர் கைது

தூத்துக்குடியில் இளைஞரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்
தமிழ்நாடு

சோனம் வாங்சுக் உடல்நிலை: 48 மணி நேரம் தான் தாக்குப்பிடிப்பார்? நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்துள்ளது. 48 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என அச்சம். நீதிமன்றம் உத்தரவு.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?