பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் பதற்றம், மத்திய கிழக்கு நெருக்கடி, மற்றும் முக்கியமாக ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் குறித்துக் கேட்டறிந்தபோது, அவர் விரிவாகப் பதிலளித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போதைய சூழல் மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், அங்கு நிலவும் சிக்கல்களுக்குப் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து கப்பல்களும் பாதுகாப்பாகச் செல்வதற்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை விரும்புவதில்லை என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அமெரிக்காவை நம்புவதற்கு ஈரானுக்குப் பல காரணங்கள் இருப்பதாகவும், அதேபோல் ஈரானை நம்புவதற்கு அமெரிக்காவிற்கும் காரணங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, ஈரான் தொடர்பான எந்தவொரு பிரச்சனைக்கும் இராணுவத் தீர்வு கிடையாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்த அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமைதியான வழிகளிலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.