நமது பாதங்கள் 'இரண்டாவது இதயம்' என அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஏராளமான அக்குபஞ்சர் புள்ளிகளும், நரம்பு முடிச்சுகளும் உள்ளன. இந்த பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
முதலில், எலுமிச்சை பழத் தோலைக் கொண்டு பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்புகளில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதங்களை சுத்தப்படுத்துவதோடு, கிருமிகளையும் ஒழிக்கும். தினமும் இரவு தூங்கும் முன், கடுகு எண்ணெயை பாத வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.
மேலும், பாத வெடிப்புகளுக்கு தேன் மற்றும் சுண்ணாம்பை சம அளவு எடுத்து குழைத்து, இரவு தூங்கும் போது கால்களில் தடவி வந்தால் வெடிப்புகள் மறையும். தினமும் குளிக்கும் போது சொரசொரப்பான கற்களில் கால்களை தேய்த்தாலும் வெடிப்புகள் மறைய உதவும்.
தேங்காய் எண்ணெயும் பாத வெடிப்புகளுக்கு சிறந்த மருந்தாகும். தினமும் இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை கால்களில் தடவி வந்தால் வெடிப்புகள் சரியாகும். உருளைக்கிழங்கை காய வைத்து தூளாக்கி, தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும். வேப்பிலை, மருதாணி மற்றும் பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் அவை சரியாகும்.