MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > கல்வி & வேலைவாய்ப்பு > பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு
கல்வி & வேலைவாய்ப்பு

பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு

Admin
Last updated: May 9, 2026 5:04 pm
Admin
Share
SHARE

மதுரை: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்களுக்கு இந்தமுறை முதுநிலை ஆசிரியர்களுக்குப் பதிலாக பட்டதாரி ஆசிரியர்களை உதவியாளராக அமர்த்தி தேர்வை எழுத வைத்ததால் பெருமளவு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு பொதுத்தேர்வுகளில் பார்வைத்திறன் குறைபாடு, சிந்தனைக் குறைபாடு மற்றும் விபத்து காரணமாக கை பாதித்து எழுத முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியர் களே ஸ்கிரைப் உதவியாளர் களாக இருந்து தேர்வை எழுதுகிறார்கள்.

ஸ்கிரைப் ஆசிரியர்கள், மாணவர்கள் சொல்வதை மட்டுமே தேர்வில் எழுத வேண்டும். மாற்றுத் திறனாளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களே கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

குறைந்தபட்சம் மாணவர் எழுதும் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், மற்ற பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களையாவது நியமிப் பார்கள். பெரும்பாலும் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், முறையாக படித்துவிட்டும், கேள்விகளைப் புரிந்து விடை களைச் சொல்லும் சிந்தனைக் குறைபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அதனால் மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் தெரியாவிட்டாலும், அவர்கள் சரியாகப் படிக்காமல் வந்தாலும், ஆசிரியர்களே அதனைச் சமாளித்து தேர்வு எழுதி அந்த மாணவர்களை வெற்றிபெற வைத்துவிடுவர்.

ஆனால், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், ஸ்கிரைப் மாணவர்களுக்கு அவர்கள் பாடப்பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக போடாமல், பத்தாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக நியமித்தனர்.

அவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு பாடத்துக்கான கேள்விகளுக்கு விடைகள் முழுமையாக தெரியாது. அந்தப் பாடத்திட்டத்துக்கான முழுமை யான புரிதலும் இருக்காது. மாற்றுத் திறனாளிகள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே ஸ்கிரைப் ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதுவார்கள்.

அவர்களே சிந்தித்து விடைகளை எழுத மாட்டார்கள். பல மாணவர் கள் வழக்கம்போல் படிக்காமல், தேர்வுக்குத் தயாராகாமல் வந்ததால் அவர்கள் இந்த முறை தேர்வை சரியாக எழுதவில்லை.

அதனால், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் ஸ்கிரைப் ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏராளமானோர் தோல்வியடைந்துள்ளனர் மாநகராட்சிப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தோல்வி அடைந்ததால் அப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரண மாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகை யில், ‘‘உதாரணமாக பொரு ளியல் பாடத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக அனுப்பி யதால் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

மாற்றுத் திறனாளி மாணவர்களும் சரியாக படிக்காமலும், படித் ததைச் சொல்லத் தெரியாமலும் இருப்பார்கள். இதற்கு முன்பு பொருளியல் பாடப்பிரிவு ஸ்கிரைப் ஆசிரியர்களே ஸ்கிரைப்பராகச் சென்றதால் மாணவர்களுக்கு மிகவும் துணையாக இருந்து பதில் தேர்வு எழுதி அவர்களைத் தேர்ச்சிபெற வைப்பார்கள்.

சில நேரங்களில் வழக்கமான மாணவர்களைவிட இந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று விடுவார்கள். இந்த முறை பொருளியல் பாடப்பிரிவில் அதிகமான ஸ்கிரைப் மாணவர்கள் தோல்விக்கு, ஸ்கிரைபராக தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரி யர்கள் சென்றதே காரணம்’’ என்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
Next Article IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: மத்திய அரசின் அறிவிப்பு

மத்திய அரசு பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்…

June 25, 2026

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் விகே பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத்

விகே பாண்டியனின் மனைவியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான…

June 25, 2026

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

You Might Also Like

கல்வி & வேலைவாய்ப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமியில் சேர்வதற்கான தகுதிகள் என்ன? – முழு விவரம்

யு.பி.எஸ்.சி (UPSC)என அழைக்கப்படும் "யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் "(UNION PUBLIC SERVICE COMMISSION) ஆண்டுதோறும் ஏராளமான காலிப் பணியிடங்களுக்காக தேர்வு நடத்துகிறது. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு அகாடம

6 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

இளநிலை ‘கியூட்’ தேர்வு தேதிகள் மாற்றம்: புதிய அறிவிப்பு

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான 'கியூட்' நுழைவுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. மே 31, ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என தேசிய…

1 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வு மறுதேர்வு: குறுகிய கால பயிற்சி முகாம் தொடக்கம்

நீட் தேர்வு மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. 38 மாவட்டங்களில் இருந்து…

1 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

கால்நடை மருத்துவம்: நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 25 முதல் ஜூன் 17 வரை நடைபெறும். விவரங்கள் இணையதளத்தில்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?