MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு

கல்வி & வேலைவாய்ப்பு

பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்கள் அதிகளவில் தோல்வி – உதவியாளராக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுதியதால் பின்னடைவு

Admin
Last updated: மே 9, 2026 5:04 மணி
Admin
Share
SHARE

மதுரை: பிளஸ் 2 தேர்வில் ‘ஸ்கிரைப்’ மாணவர்களுக்கு இந்தமுறை முதுநிலை ஆசிரியர்களுக்குப் பதிலாக பட்டதாரி ஆசிரியர்களை உதவியாளராக அமர்த்தி தேர்வை எழுத வைத்ததால் பெருமளவு மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு பொதுத்தேர்வுகளில் பார்வைத்திறன் குறைபாடு, சிந்தனைக் குறைபாடு மற்றும் விபத்து காரணமாக கை பாதித்து எழுத முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியர் களே ஸ்கிரைப் உதவியாளர் களாக இருந்து தேர்வை எழுதுகிறார்கள்.

ஸ்கிரைப் ஆசிரியர்கள், மாணவர்கள் சொல்வதை மட்டுமே தேர்வில் எழுத வேண்டும். மாற்றுத் திறனாளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களே கடந்த ஆண்டுவரை பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

குறைந்தபட்சம் மாணவர் எழுதும் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், மற்ற பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்களையாவது நியமிப் பார்கள். பெரும்பாலும் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், முறையாக படித்துவிட்டும், கேள்விகளைப் புரிந்து விடை களைச் சொல்லும் சிந்தனைக் குறைபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அதனால் மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியாகப் பதில் தெரியாவிட்டாலும், அவர்கள் சரியாகப் படிக்காமல் வந்தாலும், ஆசிரியர்களே அதனைச் சமாளித்து தேர்வு எழுதி அந்த மாணவர்களை வெற்றிபெற வைத்துவிடுவர்.

ஆனால், நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், ஸ்கிரைப் மாணவர்களுக்கு அவர்கள் பாடப்பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக போடாமல், பத்தாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக நியமித்தனர்.

அவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு பாடத்துக்கான கேள்விகளுக்கு விடைகள் முழுமையாக தெரியாது. அந்தப் பாடத்திட்டத்துக்கான முழுமை யான புரிதலும் இருக்காது. மாற்றுத் திறனாளிகள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே ஸ்கிரைப் ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதுவார்கள்.

அவர்களே சிந்தித்து விடைகளை எழுத மாட்டார்கள். பல மாணவர் கள் வழக்கம்போல் படிக்காமல், தேர்வுக்குத் தயாராகாமல் வந்ததால் அவர்கள் இந்த முறை தேர்வை சரியாக எழுதவில்லை.

அதனால், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் ஸ்கிரைப் ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏராளமானோர் தோல்வியடைந்துள்ளனர் மாநகராட்சிப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தோல்வி அடைந்ததால் அப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முக்கியக் காரண மாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதுநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகை யில், ‘‘உதாரணமாக பொரு ளியல் பாடத் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர்களை ஸ்கிரைப்பராக அனுப்பி யதால் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

மாற்றுத் திறனாளி மாணவர்களும் சரியாக படிக்காமலும், படித் ததைச் சொல்லத் தெரியாமலும் இருப்பார்கள். இதற்கு முன்பு பொருளியல் பாடப்பிரிவு ஸ்கிரைப் ஆசிரியர்களே ஸ்கிரைப்பராகச் சென்றதால் மாணவர்களுக்கு மிகவும் துணையாக இருந்து பதில் தேர்வு எழுதி அவர்களைத் தேர்ச்சிபெற வைப்பார்கள்.

சில நேரங்களில் வழக்கமான மாணவர்களைவிட இந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று விடுவார்கள். இந்த முறை பொருளியல் பாடப்பிரிவில் அதிகமான ஸ்கிரைப் மாணவர்கள் தோல்விக்கு, ஸ்கிரைபராக தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரி யர்கள் சென்றதே காரணம்’’ என்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
Next Article IPL 2026: டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இவங்க தான்.. முன்னாள் வீரர் ஆகாஷ் கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

திருப்பூர் அமராவதி நகர் சைனிக் பள்ளி
கல்வி & வேலைவாய்ப்பு

திருப்பூர் ராணுவ பள்ளியில் வேலைவாய்ப்பு: 8 பணியிடங்கள் அறிவிப்பு

திருப்பூர் அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கான 8 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2 Min Read
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்
கல்வி & வேலைவாய்ப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு கழிப்பறை தூய்மையின்மையே காரணம்: தலைமை ஆசிரியர்கள் புகார்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு கழிப்பறை தூய்மையின்மையே காரணம் என தலைமை ஆசிரியர்கள் அமைச்சர் ராஜ்மோகனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சர் விரைவில் நடவடிக்கை…

2 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

நீட் தேர்வு ரத்து: ஜூன் 21-ல் மறுதேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடு புகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடைபெறும்…

1 Min Read
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டிடம்
கல்வி & வேலைவாய்ப்பு

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் 27 வேலைவாய்ப்புகள்!

காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு 27 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?