தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூன் 6) கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி, நெல்லை மலைப்பகுதிகள், குமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாளை (ஜூன் 7) கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தென்காசி, நெல்லை மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜூன் 8ஆம் தேதி, கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி, தென்காசி, நெல்லை மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும். ஜூன் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கோவை, தென்காசி, நெல்லை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஜூன் 11ஆம் தேதி நீலகிரி, நெல்லை மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.