கரூர் மாவட்டம் குளித்தலையில், தனது பேத்தியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை, பாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து விரிவாக காண்போம். குளித்தலையைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கட்டிடத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமி தனது பாட்டியிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
பேத்தி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, உடனடியாக அரிவாளை எடுத்துக் கொண்டு மாணிக்கத்தைத் தேடிச் சென்றுள்ளார். மாணிக்கம் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை நடுரோட்டில் கண்ட பாட்டி, ஆத்திரத்தில் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, மூதாட்டியைத் தடுத்து, அவரிடமிருந்து அரிவாளைப் பறித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் மாணிக்கம், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மூதாட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை, அவரது பாட்டியே துணிச்சலுடன் எதிர்கொண்டு அரிவாளால் வெட்டிய இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
