அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு எமனாக மாறக்கூடாது: நயினார் நாகேந்திரன்

கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சை பெற்ற பெண், தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கடலூர் அரசு மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சைக்காக சட்டவிரோதமாக ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் பெற்றதாக எழுந்துள்ள புகார், தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவும் லஞ்ச வேட்டையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது' என குறிப்பிட்டுள்ளார்.

'ஏழை எளியோரின் உடல்நலத்தைக் காக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளில், உயிர்காக்கும் உட்கட்டமைப்புகள் எவ்வளவு அவசியமோ, அதேபோல் லஞ்சம், கட்டணக் கொள்ளை, தவறான சிகிச்சை முறைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'ஓர் அப்பாவி உயிரைப் பறித்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் இல்லாத, தரமான சிகிச்சை அனைவருக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version