வீட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.2 கிலோ மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாளன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில், ஜூன் 1 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றப்படாமல் 928.50 ரூபாயாக இருந்தது. ஆனால் வணிக சிலிண்டர் விலை 46 ரூபாய் உயர்ந்து, 3,237 ரூபாயிலிருந்து 3,283 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 928.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 957.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், டெல்லியில் 942 ரூபாயாகவும், மும்பையில் 941.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 968 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது, இதனால் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு ஷாக்காக இந்த விலை உயர்வு அமைந்துள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் திடீரென ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை மேலும் உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இதுவரை 928.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர், தற்போது 957.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 868.50 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, வெறும் மூன்று மாதங்களில் மட்டும் 89 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்காசியாவில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுதான் இந்த தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டரின் விலையும் ரூ.46 அதிகரித்து, தற்போது ரூ.3,283க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், சிஎன்ஜி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.96 ஆக உள்ளது. இந்த விலை உயர்வுகள் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version