அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைகின்றனர்!

அதிமுகவில் இருந்து பல முக்கியப் பிரமுகர்கள் இன்று தவெகவில் இணைகின்றனர். இதில் ஐந்து முன்னாள் அமைச்சர்கள், ஏழு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக, அமமுக மாவட்டச் செயலாளர்கள் என ஏராளமானோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எம்எஸ்எம் ஆனந்தன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தவெகவில் இணைகின்றனர். இவர்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜூ, வீரபாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜூ, கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.ஆர்.சீனிவாசன் ஆகியோரும் தவெகவில் இணைகின்றனர்.

இந்த இணைப்பு, அதிமுக மற்றும் அமமுக கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் உட்பட பல முக்கிய நிர்வாகிகளையும் உள்ளடக்கியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல முக்கியப் பிரமுகர்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவது, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version