சென்னையில் பூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் இருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில், ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு எவ்வாறு அங்கு வந்தது, யார் மறைத்து வைத்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.