MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!
இந்தியா

தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!

Admin
Last updated: May 17, 2026 7:29 pm
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த மகளையே கிணற்றில் தள்ளி கொலை செய்து உடலை புதைத்த கொடூர தந்தையின் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தும்கூரு மாவட்டம் நிம்ப மரதஹல்லி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவருக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். அவரது திருமணத்தை, மனைவியின் உறவினர் ஒருவருடன், அவர் 18 வயது ஆனதும் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. திருமணத்திற்கான துணிகள், தாலி போன்றவையும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன. இந்த பிரச்சனை முற்றிய நிலையில், திம்மராயப்பா தனது மகளையே கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி, திம்மராயப்பா தனது மகளை கிணறு அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, மகளை வலுக்கட்டாயமாக கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றில் விழுந்த மகள், 'காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சியபோதும், இரக்கமின்றி கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு, மகளின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று, யாரும் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு கொண்டு சென்று புதைத்துள்ளார். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி, வீட்டில் சகஜமாக இருந்துள்ளார்.

மாலை 6:30 மணியளவில் கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய திம்மராயப்பாவின் மனைவி, வீட்டில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, திம்மராயப்பாவும் மனைவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், காவல்துறையினரின் நுணுக்கமான விசாரணையில் திம்மராயப்பா சிக்கியுள்ளார். விசாரணையில், மனைவியின் உறவினருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாததால், அவரை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Karnataka NewsMurderTamil Nadu Crimeகொலைதும்கூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய புவித்தட்டு பிளவு: நிலநடுக்க அபாயம் அதிகரிப்பு!
Next Article சோழர் பெருமை: நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் – மோடி நெகிழ்ச்சி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி தகிக்கும்! 45°C வரை உயரும் வெப்பநிலை – IMD எச்சரிக்கை!

டெல்லி மற்றும் வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய…

May 17, 2026

மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், உத்தரப்…

May 17, 2026

கோவில் ஊழியர் ஊதியம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து…

May 17, 2026

டெல்லியில் மீண்டும் CNG விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

டெல்லி மற்றும் NCR பிராந்தியத்தில் சிஎன்ஜி விலை…

May 17, 2026

சோழர் பெருமை: நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் – மோடி நெகிழ்ச்சி

நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழர்களின் பெருமையை…

May 17, 2026

You Might Also Like

இந்தியா

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் விரைவில் தொடங்க உள்ளது. சில பகுதிகளில் மட்டும்…

1 Min Read
இந்தியா

ரூ.182 கோடி போதைப்பொருள்: ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ வெற்றி – அமித் ஷா பாராட்டு!

ரூ.182 கோடி மதிப்புள்ள 227.7 கிலோ கேப்டகான் போதைப்பொருளை 'ஆபரேஷன் ரேஜ்பில்' மூலம் கைப்பற்றிய NCB-க்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 Min Read
இந்தியா

பிரதமர் மோடி அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைப்பு!

எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை உயர்வைச் சமாளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்புப் படையின் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க உத்தரவிட்டுள்ளார்.…

1 Min Read
இந்தியா

பாகிஸ்தான் எச்சரிக்கை: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி கடும் நடவடிக்கை!

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால், பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி எச்சரித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?