MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கிரிக்கெட் எளிமையானது.. தேவையில்லாமல் சிக்கலாக்குகிறோம்: ஹாரி புரூக்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கிரிக்கெட் எளிமையானது.. தேவையில்லாமல் சிக்கலாக்குகிறோம்: ஹாரி புரூக்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - கிரிக்கெட் எளிமையானது.. தேவையில்லாமல் சிக்கலாக்குகிறோம்: ஹாரி புரூக்

விளையாட்டு

கிரிக்கெட் எளிமையானது.. தேவையில்லாமல் சிக்கலாக்குகிறோம்: ஹாரி புரூக்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 12, 2026 9:23 காலை
Sri Prem Kumar R
Share
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் டி20 தொடர் வெற்றியை கொண்டாடுகிறார்
இந்தியாவை வீழ்த்தி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்
SHARE

இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணி உலக டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், 1605 நாட்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், இங்கிலாந்து அணியின் கேப்டனும், தொடர் நாயகன் விருது வென்றவருமான ஹாரி புரூக் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 'நாங்கள் மைதானத்தில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடினோம். நன்கு ஓடி ரன்கள் எடுத்தோம், பவுண்டரிகளை விளாசினோம். நானும் ஜோஸ் பட்லரும் இணைந்து விளையாடிய போது, எங்களால் முடிந்தவரை சிறந்த நிலைக்கு அணியைக் கொண்டு செல்லவே முயன்றோம். அதுவே எங்களின் சிறந்த பார்ட்னர்ஷிப்பிற்கு காரணமாக அமைந்தது' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், 'என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் என்பது மிகவும் எளிமையான ஒரு விளையாட்டு. நாம்தான் அதை தேவை இல்லாமல் சிக்கலாக்கிக் கொள்கிறோம். பந்தைக் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றவாறு சிறந்த ஷாட்களை ஆடுவது மட்டுமே எனது பாணி. தற்போது நான் பந்துகளை நன்றாக எதிர்கொண்டு வருகிறேன்' என்றும் குறிப்பிட்டார்.

தற்போது உலகத் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில போட்டிகளாகவே இந்த இலக்கை நோக்கியே நாங்கள் விளையாடினோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வெற்றியை அவர்கள் கொண்டாடுவதற்கு முற்றிலும் தகுதியானவர்கள்' என ஹாரி புரூக் கூறினார்.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது நாமே பந்தின் வேகத்தை உருவாக்க வேண்டும் என்றும், எங்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்கள் பேட்ஸ்மேன்களை யோசிக்க வைக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 12 மாதங்களாக நாங்கள் எங்களுக்குள் மிகச் சிறந்த முறையில் விவாதித்து, எங்களுடைய திட்டங்களை மைதானத்தில் மிகச் சரியாகச் செயல்படுத்தியுள்ளோம். அதன் பலனே இந்த வெற்றி என்று உற்சாகத்துடன் அவர் மேலும் கூறினார்.

இந்தியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியதோடு, உலகின் நம்பர் 1 டி20 அணியாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது. இந்த வெற்றியால் அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், 1605 நாட்களாக டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் ஒரு வெற்றி கூட பெறாமல் அந்த இடத்தை இழந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், சர்வதேச டி20 ரன் குவிப்பில் ஜோஸ் பட்லர் விராட் கோலியின் மெகா சாதனையை முறியடித்து 3வது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் இந்த முன்னேற்றம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:EnglandHarry BrookIndiaT20 Cricketஇந்தியாகிரிக்கெட்டி20 தரவரிசைஹாரி புரூக்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாஜக எம்.பி ஒருவர் இ-20 எரிபொருள் குறித்து பேசுகிறார் இ-20 எரிபொருளுக்கு ஆதரவு: பாஜக எம்.பி கருத்து
Next Article தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பேசுகிறார் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் கோடி பரிசு: விவசாயிகள் சங்கத் தலைவர் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய ரயில்வேயின் சொகுசு ரயில் பெட்டி

ரயில் பெட்டியில் பூஜை: ரெயில்வே விளக்கம்

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்ட சொகுசு ரயில் பெட்டியில், பூஜை நடத்திக் கொள்ள…

ஜூலை 13, 2026

ரயில்களில் முதலிரவு அலங்காரம் முதல் பூஜை வரை: சர்ச்சையில் ரயில்வே நிர்வாகம்

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலிரவு அலங்காரம், பின்னர்…

ஜூலை 13, 2026

புதிய வாக்காளர்கள் பெற்றோரின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும்…

ஜூலை 13, 2026

மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கற்கள்: ராஜ்நாத் சிங்

உலகளாவிய சுகாதார சவால்களுக்கு உள்நாட்டுத் தீர்வுகளை இந்தியா…

ஜூலை 13, 2026

இந்திய கல்வி முறை குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய கல்வி முறை நேர்மையற்றதாகவும், மாணவர்களை மிரட்டி…

ஜூலை 13, 2026

You Might Also Like

உலகம்

இந்தியா – ஈரான் மோதல்: ரஷ்யாவின் ஆதரவுடன் களமிறங்கும் இந்தியா!

அமெரிக்கா - ஈரான் மோதலைத் தடுக்க இந்தியாவின் ராஜதந்திர அனுபவம் உதவும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரிக்ஸ் கூட்டத்திற்குப் பிறகு…

1 Min Read
உலகம்

இந்தியாவில் கருத்து சுதந்திரம்: லண்டனில் நீதிபதி சூர்யகாந்த் மீது கேள்வி எழுப்பப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் நீதிபதி சூர்யகாந்திடம் இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும்…

1 Min Read
இந்தியா

எதிர்காலப் போர்கள்: மனிதசக்தி மட்டும் போதாது – முப்படை தலைமை தளபதி

எதிர்காலப் போர்கள் மனிதசக்தி, மரபுரீதியான ஆயுதங்கள் சார்ந்ததாக மட்டும் இருக்காது. செயற்கை நுண்ணறிவு, டிரோன்கள், சைபர் சிஸ்டம்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என முப்படை…

1 Min Read
விளையாட்டு

முத்தரப்பு தொடர்: ஆப்கானிஸ்தானுக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

முத்தரப்பு ஏ தொடர் கிரிக்கெட் போட்டியில், அவிஷ்கா பெர்னாண்டோவின் சதம் காரணமாக இலங்கை அணி 322 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தானுக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?