தவெக அரசு கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், அதன் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளாக அளித்திருந்த மகளிருக்கு மாதம் ரூ.2,500, 5 ஏக்கருக்கு கீழ் உள்ள சிறு விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுமையாக தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 4 ஆயிரம் உதவித்தொகை போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.
ஆனால், இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த முக்கிய இலவச திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது எதிர்க்கட்சிகள் மத்தியில், 'எந்த புதிய அறிவிப்பும் இல்லை' என்ற விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'மாநிலத்தின் நிதி நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் நாங்கள் கவனம் செலுத்தப்போவது இல்லை. முதலில் மாநிலத்தின் நிதி நிலையை சீராக்கிய பிறகு, படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்' என்று தெரிவித்தார்.
தவெக அரசு தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது. மேலும், 5 ஏக்கருக்கு கீழ் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.
அதேபோல், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் பட்ஜெட்டில் இடம்பெறும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நிதியமைச்சர் மரிய வில்சன், நிதி நிலையை சீரமைப்பதில் கவனம் செலுத்துவதாகவும், அதன் பின்னரே வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு மேலும் காலதாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
